Mathanorsavam Rathiyoduthan |
---|
மதனோர்சவம் ரதியோடு தான் ரதி தேவியோ பதியோடு தான் உயிரோவியம் உனக்காக தான் உடல் வண்ணமே அதற்காக தான்
மீன் ஆடும் கண்ணில் விழுந்து நான் ஆடவோ தேன் ஆடும் செவ்விதழ் தன்னில் நீராடவோ மீன் ஆடும் கண்ணில் விழுந்து நான் ஆடவோ தேன் ஆடும் செவ்விதழ் தன்னில் நீராடவோ புரியாத பெண்மை இது பூப்போன்ற மென்மை இது பொன்னந்தி மாலை என்னென்ன லீலை
மதனோர்சவம் ரதியோடு தான் ரதி தேவியோ பதியோடு தான்
கார் கால மேகம் திரண்டு குழலானது கண்ணா உன் கையில் புரண்டு சதிராடுது கார் கால மேகம் திரண்டு குழலானது கண்ணா உன் கையில் புரண்டு சதிராடுது ஓ ஓ ஓ அலங்கார தேவி முகம்அடங்காத ஆசை தரும் ஒன்றான நேரம் ஒரு கோடி இன்பம்
மதனோர்சவம் ரதியோடு தான் ரதி தேவியோ பதியோடு தான்