Mayakkam Enna

Mayakkam Enna Song Lyrics In English


மயக்கமென்ன
இந்த மௌனம் என்ன
மணி மாளிகை தான்
கண்ணே

தயக்கமென்ன
இந்த சலனமென்ன
அன்பு காணிக்கை
தான் கண்ணே

கற்பனையில்
வரும் கதைகளிலே
நான் கேட்டதுண்டு
கண்ணா என் காதலுக்கே
வரும் காணிக்கை என்றே
நினைத்ததில்லை கண்ணா

தேர் போலே
ஒரு பொன்னூஞ்சல்
அதில் தேவதை போலே
நீ ஆட

பூவாடை
வரும் மேனியிலே
உன் புன்னகை
இதழ்கள் விளையாட

கார்காலம் என
விரிந்த கூந்தல் கன்னத்தின்
மீதே கோலமிட

கை வளையும்
மை விழியும் கட்டி
அணைத்து கவி பாட

மயக்கமென்ன
ம்ம் ஹ்ம்ம் ஆஹா
இந்த மௌனம் என்ன
ஆஹா
மணி மாளிகை
தான் கண்ணே



பாடி வரும்
வண்ண நீரோடை
உன்னை பாத பூஜை
செய்து வர

ஓடி வரும்
அந்த ஓடையிலே
உன் உள்ளமும்
சேர்ந்து மிதந்து வர


மல்லிகை
காற்று மெல்லிடை
மீது மந்திரம் போட்டு
தாலாட்ட

வள்ளி
மலைத்தேன்
அள்ளி எழுந்த
வண்ண இதழ்
உன்னை நீராட்ட

மயக்கமென்ன
ஆஹா
இந்த மௌனம் என்ன
ஆஆஆ
மணி மாளிகை
தான் கண்ணே



அன்னத்தை
தொட்ட கைகளினால்
மது கிண்ணத்தை இனி
நான் தொட மாட்டேன்

கன்னத்தில்
இருக்கும் கிண்ணத்தை
எடுத்து மது அருந்தாமல்
விட மாட்டேன்

உன்னையல்லால்
ஒரு பெண்ணை இனி நான்
உள்ளத்தினாலும் தொட
மாட்டேன்

உன் உள்ளம்
இருப்பது என்னிடமே
அதை உயிர் போனாலும்
தர மாட்டேன்

மயக்கமென்ன
ஆஹா
இந்த மௌனம் என்ன
ஆஆஆ
மணி மாளிகை
தான் கண்ணே
ஆஆஆ
தயக்கமென்ன
ஆஹாஹா
இந்த சலனமென்ன
ஆஹாஹா
அன்பு காணிக்கை
தான் கண்ணே அன்பு
காணிக்கை தான் கண்ணே
ஆஹாஹாஹாஆ