Mayakkama Kan Thirakkuma

Mayakkama Kan Thirakkuma Song Lyrics In English


மயக்கமா கண் திறக்குமா
மயக்கமா கண் திறக்குமா
பெண் மயில் விட்டுப் போகுமா
பெண் மயில் விட்டுப் போகுமா
எனை குழந்தை போல் அணைத்தது நீயம்மா
அருள் மனிதனாய் ஆக்கிய தாயம்மா

மயக்கமா கண் திறக்குமா
பெண் மயில் விட்டுப் போகுமா

தனியாக நான் ஓர் தீவான போது
நான் கண்ட பகலும் இருள் போன்றதம்மா
விழி மீது தாவி ஒளி தன்னைத் தூவி
இருள் போக நிதமும் அருள் செய்த பாவை
உயிர் வாழ இங்கே உன் அன்பு தேவை
சுதி லயம் தானே இணை சேர்ந்திடாதோ
சுமை தாங்கி நானோ சோகங்கள் ஏனோ
கண் வாடி நின்றால் இமை ஏங்கிடாதோ
அமையும் அனைத்தும் விதி வசமா

மயக்கமா கண் திறக்குமா
பெண் மயில் விட்டுப் போகுமா

லா லலலல லாலால லாலா
லலலல லாலால லாலா
லால லாலால லால லாலா
லால லாலால லால லால லால லா


என் பருவப் பாடல் வெறும் காதல் கனவோ
என் இனிய தோழி இது என்ன பிரிவோ
உன் கண்ணீரின் வெள்ளம் கடல் போலத் தானோ
கரை காணாமல் மூழ்கும் படகாக நானோ
கடல் கொண்டு நானும் உடல் மூழ்கினாலும்
உயிர் கொண்ட காதல் யுகம் தோறும் வாழும்
உறவான பின்பு பிரிவென்பதேது
பல ஜென்மம் வந்த பந்தம் தீர்ந்திடாது
வானம் இரண்டாய் விளங்கிடுமா

மயக்கமா கண் திறக்குமா
மயக்கமா கண் திறக்குமா
பெண் மயில் விட்டுப் போகுமா
பெண் மயில் விட்டுப் போகுமா
எனை குழந்தை போல் அணைத்தது நீயம்மா
அருள் மனிதனாய் ஆக்கிய தாயம்மா

மயக்கமா கண் திறக்குமா
பெண் மயில் விட்டுப் போகுமா