Mayakkama Kan Thirakkuma |
---|
மயக்கமா கண் திறக்குமா
மயக்கமா கண் திறக்குமா
பெண் மயில் விட்டுப் போகுமா
பெண் மயில் விட்டுப் போகுமா
எனை குழந்தை போல் அணைத்தது நீயம்மா
அருள் மனிதனாய் ஆக்கிய தாயம்மா
மயக்கமா கண் திறக்குமா
பெண் மயில் விட்டுப் போகுமா
தனியாக நான் ஓர் தீவான போது
நான் கண்ட பகலும் இருள் போன்றதம்மா
விழி மீது தாவி ஒளி தன்னைத் தூவி
இருள் போக நிதமும் அருள் செய்த பாவை
உயிர் வாழ இங்கே உன் அன்பு தேவை
சுதி லயம் தானே இணை சேர்ந்திடாதோ
சுமை தாங்கி நானோ சோகங்கள் ஏனோ
கண் வாடி நின்றால் இமை ஏங்கிடாதோ
அமையும் அனைத்தும் விதி வசமா
மயக்கமா கண் திறக்குமா
பெண் மயில் விட்டுப் போகுமா
லா லலலல லாலால லாலா
லலலல லாலால லாலா
லால லாலால லால லாலா
லால லாலால லால லால லால லா
என் பருவப் பாடல் வெறும் காதல் கனவோ
என் இனிய தோழி இது என்ன பிரிவோ
உன் கண்ணீரின் வெள்ளம் கடல் போலத் தானோ
கரை காணாமல் மூழ்கும் படகாக நானோ
கடல் கொண்டு நானும் உடல் மூழ்கினாலும்
உயிர் கொண்ட காதல் யுகம் தோறும் வாழும்
உறவான பின்பு பிரிவென்பதேது
பல ஜென்மம் வந்த பந்தம் தீர்ந்திடாது
வானம் இரண்டாய் விளங்கிடுமா
மயக்கமா கண் திறக்குமா
மயக்கமா கண் திறக்குமா
பெண் மயில் விட்டுப் போகுமா
பெண் மயில் விட்டுப் போகுமா
எனை குழந்தை போல் அணைத்தது நீயம்மா
அருள் மனிதனாய் ஆக்கிய தாயம்மா
மயக்கமா கண் திறக்குமா
பெண் மயில் விட்டுப் போகுமா