Mayilaadum Thoppil

Mayilaadum Thoppil Song Lyrics In English


மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்
மானாடும் போது மனமாடக் கண்டேன்
மானானது யாரோ மகராணியே நீயோ
மனமாடவே தூண்டும் மாதேவியே நீயோ

மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்
மானாடும் போது மனமாடக் கண்டேன்



வெல்வெட்டுக் கன்னம் தொட்டு
வைக்கின்ற முத்தம் எல்லாம்
கல்வெட்டு போலே நிற்கும்
கண்ணே நம் காலம் எல்லாம்

நேசித்து நெஞ்சில் வைத்து
நீண்ட காலம்
யாசித்த பெண்ணுக்கின்று ராஜ யோகம்

யோசித்து ஒவ்வொன்றாக
காதல் பாடம்
வாசித்து அர்த்தம் சொல்லும் வேளையாகும்

மை விழியோரம் ஐவகை பாணம்

மன்மதன் போடும் மங்கல நேரம்

பொன் மாலைப் பொழுதினிலே

மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்


மானானது யாரோ மகராஜனே நீயோ

உள்ளத்தின் உண்டியலில்
உன் ஆசை எண்ணங்களை
சேமித்து வைத்த கன்னி
சிந்தித்தாள் உன்னை எண்ணி

சேமித்த அன்புத் தேனை
நானும் வாங்க
சாமத்தில் சாமந்திப் பூ நாளும் ஏங்க

பூவுக்கு வந்ததின்று
பூஜை நேரம்
போகட்டும் வெட்கம் இன்று காத தூரம்

மீதங்கள் இன்றி மோகங்கள் கூட

மோகங்கள் நூறு ராகங்கள் பாட

சங்கீத மயக்கத்திலேஏ

மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்
மானாடும் போது மனமாடக் கண்டேன்
மானானது யாரோ மகராஜனே நீயோ
மனமாடவே தூண்டும் மாதேவனே நீயோ

மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்
மானாடும் போது மனமாடக் கண்டேன்