Mazhai Koonthal Mudhal

Mazhai Koonthal Mudhal Song Lyrics In English


ஆஆஆஆஆஹ்ஆஹ் ஆஆஆஹ்ஆஆஹ்ஆஹ்

மழை கூந்தல் முதல் மலர்ப்பாதம் வரை தெய்வக் காட்சி தெரிகின்றது மழை கூந்தல் முதல் மலர்ப்பாதம் வரை தெய்வக் காட்சி தெரிகின்றது

எழில் கோலங்களும் இந்திர ஜாலங்களும் அதில் ஆட்சி புரிகின்றது அருளாட்சி புரிகின்றது எழில் கோலங்களும் இந்திர ஜாலங்களும் அதில் ஆட்சி புரிகின்றது அருளாட்சி புரிகின்றது

மழை கூந்தல் முதல் மலர்ப்பாதம் வரை தெய்வக் காட்சி தெரிகின்றது

இளம்பிறை நுதல் மீது எழுதிய வில் கண்டேன் இமைகளின் நிழலோரம் எரிகழல் விழிக் கண்டேன்

குளம் வளர் கமலம் போல்கமலம் போல் குளம் வளர் கமலம் போல் குவியிதழ் மடல் கண்டேன் நுதல் கண்டேன் விழிக் கண்டேன் இதழ் கண்டேன் கனியிதழ் கண்டேன்

குளம் வளர் கமலம் போல் குவியிதழ் மடல் கண்டேன் குவியிதழ் நகையோரம் கொற்கையின் பரல் கண்டேன்

மழை கூந்தல் முதல் மலர்ப்பாதம் வரை தெய்வக் காட்சி தெரிகின்றது

வலம்புரி சங்காக வஞ்சியின் கழுத்தாட ஆஆஆஆஆஹ்ஆஹ்ஆ வலம்புரி சங்காக வஞ்சியின் கழுத்தாட ஒரு கனி குறைவாக முக்கனி எழுந்தாட ஒரு கனி குறைவாக முக்கனி எழுந்தாட

மேகலை நகையாட மெல்லிய இடையாட வாழையின் மடல் கேட்டு வாங்கிய தொடையாட மேகலை நகையாட மெல்லிய இடையாட வாழையின் மடல் கேட்டு வாங்கிய தொடையாட


மேனியில் எதை சொல்ல நான் அதில் எதை தள்ள நான் படைத்த ஞானமெல்லாம் வாய் புதைத்து நின்றதென்ன ஆஆஆஆஆஹ்ஆஹ்ஆ ஆஹ்ஆஹ்ஆ

பூவளந்து பொன்னளந்து மேவிய தேவி உந்தன் பாத தாமரை தேவரென்ன மூவரென்ன யாவரும் தேடி நிற்கும் வேத தாமரை

குலுங்கிடும் சலங்கைகள் ஓம் என ஒலித்திட கோமள வதனத்தில் குங்குமம் பளிச்சிட இயல் இசை நாடக கூத்துகள் நடித்திட ஏழுகடல் எண்திசை இடிபட பொடிபட

தகிட தகிட தகிட தகிடதோமென ஜதியோசையில் தரணி அதிர்ந்திட மகஸகஸ நிஸநிபமகம ஸ்வரராக கீதம் இசைத்திட

டுட்டுடுவென பம்பை தாளம் டும்டும்வென ஜண்டை மேளம் அம்மா உன் அரங்கினில் ஆற்றிட பும்பும்வென பூம்மின் சத்தம் டம்டம்டம்மென கொட்டும் பறைகள் கொண்டாடும் அபிநய நாயகி

தத்தும் கலை வித்தை இளம் தத்தை இவள் தஞ்சம் என பழகு நடனம் அழகு நளினம் புவனம் அறியவே அலைமகளும் அடிபணிய கலைமகளும் கவி பொழிய மலைமகளின் திருநடனம் வாழ்க

வானமொடு பூமியாட உலவிடும் ஜீவராசி யாவும் ஆட நடமிடும் அழகெல்லாம் விழியெல்லாம் பருகிட அருளே நெருங்கி வா

மழை கூந்தல் முதல் மலர்ப்பாதம் வரை தெய்வக் காட்சி தெரிகின்றதுஆஆஆ