Mazhayin Thuliyil |
---|
மழையின்
துளியில் லயமிருக்குது
துளிகள் விழுந்து ஸ்வரம்
பிரிக்குது மாமா என் மாமா
மலரின் இதழில்
பனி விழுந்தது மயங்கி
மயங்கி மலர் எழுந்தது
மாமா என் மாமா
தூவானம் தூவும்
அதில் ஏதேதோ கானம்
ஆராரோ பாடும் அதில்
ஆனந்தம் கூடும்
மழையின்
துளியில் லயமிருக்குது
துளிகள் விழுந்து ஸ்வரம்
பிரிக்குது மாமா என் மாமா
ஆகாயம் அங்கும்
இங்கும் ஆயிரம் ஆயிரம்
பூக்கோலம் தாழ்வாரம்
எங்கும் வண்ணம் தங்கம்
மின்னும் மாக்கோலம்
பூவோடு பூங்காற்றும்
பூபாளம் பாடாதோ பெண்ணான
என்னுள்ளம் பூப்போல ஆடாதோ
பாசமெனும்
கூட்டில் பல பாடம்
பெறும் கிளிகள் பாடி
வரும் பாட்டில் பல
பாவம் பெறும் மொழிகள்
நாதமென்று
கீதமென்று சேர்ந்தது
வழிகள்
மழையின்
துளியில் லயமிருக்குது
துளிகள் விழுந்து ஸ்வரம்
பிரிக்குது மாமா என் மாமா
மலரின் இதழில்
பனி விழுந்தது மயங்கி
மயங்கி மலர் எழுந்தது
மாமா என் மாமா
அன்பான நெஞ்சம்
எல்லாம் ஆண்டவன் வாழும்
கோவிலது யாரோடு யாரைக்
கண்டு சங்கமம் ஆகப்
போகிறது
எந்நாளும் சங்கீதம்
நம்மோடு ஒன்றாகும்
எப்போதும் சந்தோஷம்
நம்மோடு வந்தாடும்
வானம் எங்கும்
பறந்து நான் தேடும் இளம்
வயது சோகங்களை மறந்து
இது ராகம் தரும் மனது
சேர்ந்ததென்று
பாடுதம்மா ஆனந்தம்
எனது
மழையின்
துளியில் லயமிருக்குது
துளிகள் விழுந்து ஸ்வரம்
பிரிக்குது மாமா என் மாமா
மலரின் இதழில்
பனி விழுந்தது மயங்கி
மயங்கி மலர் எழுந்தது
மாமா என் மாமா
தூவானம் தூவும்
அதில் ஏதேதோ கானம்
ஆராரோ பாடும் அதில்
ஆனந்தம் கூடும்
மழையின்
துளியில் லயமிருக்குது
துளிகள் விழுந்து ஸ்வரம்
பிரிக்குது மாமா என் மாமா