Meethaatha Oru Veenai |
---|
இசை அமைப்பாளர் : இளையராஜா
மீட்டாத ஒரு வீணை எனை மீட்டும் நேரம்
புதிரான ஒரு பாடல் பொருள் சொல்லும் நேரம்
ஆகாயப் பூக்கள் மழை தூவும் நேரம்
மனதின் ராகம்
மீட்டாத ஒரு வீணை எனை மீட்டும் நேரம்
புதிரான ஒரு பாடல் பொருள் சொல்லும் நேரம்
பளிங்கினால் ஒரு வீடு
அமைக்கவா பொன் மானே
விழியினால் இரு தீபம்
ஏற்றவா அதில் தானே
மறந்த அந்தப் பாடலுக்கு
அடி எடுத்துக் கொடுக்கவா
விருந்து என்னை அழைத்ததென்று
புதுக் கவிதை படிக்கவா
எரிமலையும் பனிமலை என்றே
மாறுது பைங்கிளி
மீட்டாத ஒரு வீணை எனை மீட்டும் நேரம்
புதிரான ஒரு பாடல் பொருள் சொல்லும் நேரம்
ஆகாயப் பூக்கள் மழை தூவும் நேரம்
மனதின் ராகம்
மீட்டாத ஒரு வீணை எனை மீட்டும் நேரம்
கனவிலே துயில் நீங்கி
திரும்பினால் உன் உருவம்
முழு நிலா முகம் பார்க்க
மலர்ந்ததே உன் வடிவம்
நடந்து செல்லும் வழி முழுதும்
என் நிழலை அனுப்பவா
துணைக்கு வந்த நிழல் அதற்கு
குடை எடுத்துப் பிடிக்கவா
ஒரு கணமும் பல யுகம் என்றே ஆகுது
சொல் பைங்கிளி
மீட்டாத ஒரு வீணை எனை மீட்டும் நேரம்
புதிரான ஒரு பாடல் பொருள் சொல்லும் நேரம்
ஆகாயப் பூக்கள் மழை தூவும் நேரம்
மனதின் ராகம்
மீட்டாத ஒரு வீணை எனை மீட்டும் நேரம்
இருவர் : புதிரான ஒரு பாடல் பொருள் சொல்லும் நேரம்