Mel Isaiye |
---|
ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
மெல்லிசையே என் இதயத்தின்
மெல்லிசையே
என் உறவுக்கு இன்னிசையே
என் உயிர் தொடும்
நல்லிசையே
கண்ணை கொஞ்சம் திறந்தேன்
கண்களுக்குள் விழுந்தாய்
எனது விழிகளை மூடி கொண்டேன்
சின்னஞ்சிறு கண்களில்
உன்னை சிறை எடுத்தேன்
மெல்லிசையே என்
இதயத்தின் மெல்லிசையே
என் உறவுக்கு இன்னிசையே
என் உயிர் தொடும்
நல்லிசையே
எத்தனை இரவு
உனக்காக விழித்திருந்தேன்
உறங்காமல் தவித்திருந்தேன்
விண்மீன்கள் எரித்திரிந்தேன்
எத்தனை நிலவை
உனக்காக வெறுத்திருந்தேன்
உயிர் சுமந்து பொறுத்திருந்தேன்
உன்னை கண்டு உயிர் தெளிந்தேன்
நீ ஒரு பாதி
என்றும்
நான் ஒரு பாதி
காதல் ஜோதி
என்னவனே
நிலம் கடல் ஆனாலும்
அழியாது இந்த பந்தம்
கண்ணை கொஞ்சம் திறந்தேன்
கண்களுக்குள் விழுந்தாய்
எனது விழிகளை மூடி கொண்டேன்
சின்னஞ்சிறு கண்களில்
உன்னை சிறை எடுத்தேன்
கண்ணை கொஞ்சம் திறந்தேன்
கண்களுக்குள் விழுந்தாய்
எனது விழிகளை மூடி கொண்டேன்
சின்னஞ்சிறு கண்களில்
உன்னை சிறை எடுத்தேன்
மன்மத விதையை
மனதோடு விதைத்தது யார்
மழை ஊற்றி வளர்த்தது யார்
மலர் காடு பறித்தது யார்
காதல் தீயை
நெய் கொண்டு வளர்த்தது யார்
கை கொண்டு மறைத்தது யார்
அதை வந்து அணைப்பது யார்
ஆயிரம் காலம்
வாழும்
காதலும் வாழும்
ஆயுள் நீளும்
பெண்ணழகே
மண்ணும் விண்ணும் போனாலும்
மாறாது இந்த சொந்தம்
கண்ணை கொஞ்சம் திறந்தேன்
கண்களுக்குள் விழுந்தாய்
எனது விழிகளை மூடி கொண்டேன்
சின்னஞ்சிறு கண்களில்
உன்னை சிறை எடுத்தேன்
கண்ணை கொஞ்சம் திறந்தேன்
கண்களுக்குள் விழுந்தாய்
எனது விழிகளை மூடி கொண்டேன்
சின்னஞ்சிறு கண்களில்
உன்னை சிறை எடுத்தேன்
ஹ்ம்ம் ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்