Metti Oli Kaatrodu

Metti Oli Kaatrodu Song Lyrics In English


பாடலாசிரியர் : கங்கை அமரன்

னனனன னனனானனா னனனா நனனானனானனனா நனனானனா

மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட மேனி ஒரு பூவாக மெல்லிசையின் பாவாக மேனி ஒரு பூவாக மெல்லிசையின் பாவாக கோதை மலர் பூம்பாதம் வாவென்னுதே கோதை மலர் பூம்பாதம் வாவென்னுதே

மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட

ஓஓஓவாழ் நாளெல்லாம் உன்னோடுதான் வாழ்ந்தாலே போதும் வாழ்வென்பதின் பாவங்களை நாம் காண வேண்டும்

நாளும் பல நன்மை காணும் எழில் பெண்மை பூவை வைத்த பூ வாசம் போதை கொண்ட உன் நேசம் தென்றல் சுகம்தான் வீசும் தேடாமல் சேராதோ

மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட


ஆஆஹ்ஆஅஆஆஆஹ்ஆ

ஏவெண் முல்லையே என் கண்மணி ஊர்கோல நேரம் பொன் காலடி படும் போதிலே பூந்தென்றல் பாடும்

பார்வை பட்ட காயம் பாவை தொட்டுக் காயும் எண்ணம் தந்த முன்னோட்டம் என்று அந்த வெள்ளோட்டம் கண்ட பின்பு கொண்டாட்டம் கண்டாடும் என் நெஞ்சம்

மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட மேனி ஒரு பூவாக மெல்லிசையின் பாவாக மேனி ஒரு பூவாக மெல்லிசையின் பாவாக கோதை மலர் பூம்பாதம் வாவென்னுதே கோதை மலர் பூம்பாதம் வாவென்னுதே ஆஅஆ

மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட