Minmini Paarvaigal |
---|
மின்மினி
பார்வைகள் என்னென்ன
கூறுது என் நெஞ்சம் ஏங்குது
கண்மணி உன் கண்ண பூவினில்
என் எண்ணம் தாவுது அன்பென்னும்
தேன் கொடு பூங்குடி
வண்ண சித்திரம்
பேசுமோ கன்னி சிற்பங்கள்
பாடுமோ எங்கும் சங்கீதமோ
மின்மினி
பார்வைகள் என்னென்ன
கூறுது என் நெஞ்சம் ஏங்குது
கண்மணி உன் கண்ண பூவினில்
என் எண்ணம் தாவுது அன்பென்னும்
தேன் கொடு பூங்குடி
வண்ண சிந்து
துள்ளி வந்து பிஞ்சு கை
கொண்டு பந்தாடுதே
தேனில் முத்து தென்றல்
தொட்டு எந்தன் கன்னத்தில்
முத்தாடுதே
வைகறை வாசல்
வர வாச பூமலர் கோலம்
இட முற்றத்தில் பௌர்ணமியாய்
என் நெஞ்சத்தில் பூ மணியாய்
கங்கையும்
காவேரி சந்தித்து
பேசிட இன்பம்
சொல்ல கூடுமோ
மின்மினி
பார்வைகள் என்னென்ன
கூறுது என் நெஞ்சம் ஏங்குது
கண்மணி உன் கண்ண பூவினில்
என் எண்ணம் தாவுது அன்பென்னும்
தேன் கொடு பூங்குடி
தோளில் வைத்து
தொட்டில் இட்டு நீயும்
தூங்கிட தாலாட்டவா
மேகம் வைத்து மெத்தை
தைத்து ராகம் நீ என்று
சீராட்டவா
உள்ளத்தின்
ஓசைகளை செல்ல
புன்னகை பேசிடுதே
சொல்லவும் வார்த்தை
இன்றி இன்ப வெள்ளத்தில்
ஆழ்த்திடுதே
சொர்கத்தின்
வீணைகள் இன்பத்தை
மீட்டிட சொர்கம் இங்கு
வந்ததே
மின்மினி
பார்வைகள் என்னென்ன
கூறுது என் நெஞ்சம் ஏங்குது
கண்மணி உன் கண்ண பூவினில்
என் எண்ணம் தாவுது அன்பென்னும்
தேன் கொடு பூங்குடி
வண்ண சித்திரம்
பேசுமோ கன்னி சிற்பங்கள்
பாடுமோ எங்கும் சங்கீதமோ
மின்மினி
பார்வைகள் என்னென்ன
கூறுது என் நெஞ்சம் ஏங்குது
கண்மணி உன் கண்ண பூவினில்
என் எண்ணம் தாவுது அன்பென்னும்
தேன் கொடு பூங்குடி