Minnal Varum |
---|
மின்னல் வரும் சேதியிலே
மழை பொழியும்
என் மன்னர் வரும் சேதியிலே
மனம் குளிரும் ஆஹாஆ
மின்னல் வரும் சேதியிலே
மழை பொழியும்
என் மன்னர் வரும் சேதியிலே
மனம் குளிரும்
தென்றல் வரும் சேதியிலே
கொடி அசையும் அசையும்
வண்டு தேடி வரும் சேதியிலே
பூ மலரும் மலரும்
தென்றல் வரும் சேதியிலே
கொடி அசையும் அசையும்
வண்டு தேடி வரும் சேதியிலே
பூ மலரும் மலரும்
கண்களிலே ஆசை நின்று
தாளமிடும்
கண்களிலே ஆசை நின்று
தாளமிடும்
குமரி கன்னத்திலே நாணம் வந்து
கோலமிடும்
கன்னத்திலே நாணம் வந்து
கோலமிடும் ம்ம் ம்ம்
மின்னல் வரும் சேதியிலே
மழை பொழியும்
என் மன்னர் வரும் சேதியிலே
மனம் குளிரும்
பள்ளியறைச் சேதியிலே
பதட்டம் வரும் பதட்டம் வரும்
பருவம் சொல்லும் சேதியிலே
மயக்கம் வரும் மயக்கம் வரும்
சொல்லி கொண்ட பாடத்தாலே
தாய்மை வரும்
சொல்லி கொண்ட பாடத்தாலே
தாய்மை வரும்
நான் தாலாட்டுப் பாடுகின்ற
நாளும் வரும்
நான் தாலாட்டுப் பாடுகின்ற
நாளும் வரும்
மின்னல் வரும் சேதியிலே
மழை பொழியும்
என் மன்னர் வரும் சேதியிலே
மனம் குளிரும்
ஆஹான்
மின்னல் வரும் சேதியிலே
மழை பொழியும்
என் மன்னர் வரும் சேதியிலே
மனம் குளிரும்