Moodi Thirantha

Moodi Thirantha Song Lyrics In English


மூடி திறந்த இமை
இரண்டும் பார் பார் என்றன

முந்தானை
காற்றிலாடி வா வா
என்றது

ஆடி கிடந்த கால்
இரண்டும் நில் நில் என்றன
ஆசை மட்டும் வாய் திறந்து
சொல் சொல் என்றது

மூடி திறந்த இமை
இரண்டும் பார் பார் என்றன

வா வா என்றது

அன்ன கொடி நடை
முன்னும் பின்னும் ஐயோ
ஐயோ என்றது

வண்ண கொடியிடை
கண்ணில் விழுந்து மெய்யோ
பொய்யோ என்றது

கன்னி பருவம்
உன்னை கண்டு காதல்
காதல் என்றது

காதல் என்றதும்
வேர் ஓர் இதயம் நாணம்
நாணம் என்றது

மூடி திறந்த இமை
இரண்டும் பார் பார் என்றன

வா வா என்றது

காட்டு குயிலை
கூண்டில் அடைத்து பாட்டு
பாட சொன்னது


கூட்டு குயிலை
நாட்டு குயிலாய் கூட்டி
போக வந்தது

காட்டு குயிலை
கூண்டில் அடைத்து பாட்டு
பாட சொன்னது

அது கூட்டு குயிலை
நாட்டு குயிலாய் கூட்டி
போக வந்தது

வேட்டை உள்ளம்
வலை விரித்து வேங்கை
வருமென நின்றது

வேங்கைக்காக
விரித்த வலையில் வெள்ளை
கலை மான் விழுந்தது

மூடி திறந்த இமை
இரண்டும் பார் பார் என்றன

முந்தானை
காற்றிலாடி வா வா
என்றது

ஆடி கிடந்த கால்
இரண்டும் நில் நில் என்றன

ஆசை மட்டும்
வாய் திறந்து சொல்
சொல் என்றது

ஆண் & மூடி
திறந்த இமை இரண்டும்
பார் பார் என்றன வா
வா என்றது