Mookuthi Poo Melae |
---|
மூக்குத்தி பூ மேலே
காத்து உக்காந்து பேசுதம்மா
ஹ்ஹீம்ம்ம்
அது உக்காந்து பேசையிலே
தேனு உள்ளூர ஊறுதம்மா
ஆஹாஹா
அது ஏந்தான் புரியலையே அதை
நான்தான் அறியலையே
ஒரு மோகம் ஒரு தாகம்
இங்கு உன்னாலே இந்நேரம் உண்டானது
மூக்குத்தி பூ மேலே
காத்து உக்காந்து பேசுதய்யா
ஹா ஹான்
அது உக்காந்து பேசையிலே
தேனு உள்ளூர ஊறுதய்யா
ஓஹோ
அது ஏந்தான் புரியலையே
அதை நான்தான் அறியலையே
ஒரு மோகம் ஒரு தாகம் இங்கு
உன்னாலே இந்நேரம் உண்டானது
மூக்குத்தி பூ மேலே
காத்து உக்காந்து பேசுதம்மா
மேற்க்காலே போகின்ற
மேகங்களே
மண்ணில் வாருங்களேன்
மழை தாருங்களேன்
உடல் சூடாச்சி பாருங்களேன்
மழை மேகம் நானாகவா
மலர் தேகம் நீராட்டவா
மடி ஏந்தி தாலாட்டவா
மனமாற சீராட்டவா
வெறும் ஏக்கம் ஆகாதம்மா
விட்டு போகாதம்மா
நான் கொஞ்சாம தீராதம்மாஆமா
மூக்குத்தி பூ மேலே
காத்து உக்காந்து பேசுதய்யா
அது உக்காந்து பேசையிலே
தேனு உள்ளூர ஊறுதம்மா
கல்யாணம் கச்சேரி
ஊர்கோலமும்
ஒரு பூமாலையும்
திரு பொன்னூஞ்சலும்
அடி நான் காண நாளாகுமோ
திருநாளும் தானே வரும்
உனைத்தேடி தேனே வரும்
வரும்போது வேலை வரும்
அது வந்தா மாலை வரும்
அட நானும் உன் போலத்தான்
அத கொண்டாடத்தான்
எதிர்பார்த்தேனே அந்நாளைதான்ஆமா
மூக்குத்தி பூ மேலே
காத்து உக்காந்து பேசுதம்மா
அது உக்காந்து பேசையிலே
தேனு உள்ளூர ஊறுதய்யா
அது ஏந்தான் புரியலையே
அதை நான்தான் அறியலையே
ஒரு மோகம்
ஒரு தாகம்
இங்கு உன்னாலே
இந்நேரம் உண்டானது
இருவர் : தான்னான தானன்னா தானா
தானனான நன்னா னா
தான்னான தானன்னா தானா
தானனான நன்னா னா