Moolai Thirugum |
---|
காலை அரும்பி
பகலெல்லாம் போதாகி
மாலை மலரும் இந்நோய்
மூளை திருகும்
மூச்சுக்குள் அடுப்பெரிக்கும்
இடப்பக்கம் வலப்பக்கம்
இதயம் பெண்டுலம் ஆடும்
மூளை திருகும்
மூச்சுக்குள் அடுப்பெரிக்கும்
இடப்பக்கம் வலப்பக்கம்
இதயம் பெண்டுலம் ஆடும்
வாய் மட்டும்
பேசாது உடம்பெல்லாம்
பேசும்
வாய் மட்டும்
பேசாது உடம்பெல்லாம்
பேசும்
இது மோசமான
நோய் ரொம்ப பாசமான
நோய்
இது மோசமான
நோய் ரொம்ப பாசமான
நோய்
மூளை திருகும்
மூச்சுக்குள் அடுப்பெரிக்கும்
இடப்பக்கம் வலப்பக்கம்
இதயம் பெண்டுலம் ஆடும்
மூளை இருந்த
இடம் சூலை ஆகி விடும்
அது தான் நோயின் ஆரம்பம்
கால்கள் பறித்து
கொண்டு சிறகை இரவல்
தரும் ஆனால் அதுவே
ஆனந்தம்
ஒரு கடிதம்
எழுதவே கை வானை
கிழிக்குமே விரல் எழுதி
முடித்ததும் அதை கிழித்து
போடுமே
இது ஆண்
நோயா பெண் நோயா
காமன் நோய் தான்
என்போமே
மூளை திருகும்
மூச்சுக்குள் அடுப்பெரிக்கும்
இடப்பக்கம் வலப்பக்கம்
இதயம் பெண்டுலம் ஆடும்
ஆடும் ஆடும் ஆடும்
சோற்றை
மறுதலித்து விண்மீன்
விழுங்க சொல்லும்
அன்னம் தண்ணீர்
செல்லாது
நெஞ்சில் குழல்
செலுத்தி குருதி குடித்து
கொல்லும் வேண்டாம்
என்றால் கேட்காது
ஒரு நண்பன்
என்று தான் அது கதவு
திறக்குமே பின் காதலாகியே
வந்த கதவு சாத்துமே
இந்த நோயின்றி
போனாலே வாழ்க்கை
சௌக்கியம் ஆகாதே
மூளை திருகும்
மூச்சுக்குள் அடுப்பெரிக்கும்
இடப்பக்கம் வலப்பக்கம்
இதயம் பெண்டுலம் ஆடும்
ஆடும் ஆடும் ஆடும்
வாய் மட்டும்
பேசாது உடம்பெல்லாம்
பேசும்
வாய் மட்டும்
பேசாது உடம்பெல்லாம்
பேசும்
இது மோசமான
நோய் ரொம்ப பாசமான
நோய்
இது மோசமான
நோய் ரொம்ப பாசமான
நோய்