Mottu Malaradha |
---|
பெண் : மொட்டு மலராத தாமரப்பூ அது தொட்டுப் பறிக்காதே மச்சான் என்னை கட்டிப் புடிக்காதே காத்துப் பட்டாலே போதும் என் கட்டு கொலஞ்சிடும் கிட்ட நெருங்காதே
மொட்டு மலராத தாமரப்பூ அது தொட்டுப் பறிக்காதே
அஞ்சு வயசுல ஆரம்பிச்சு நானு மஞ்ச தேச்சு குளிச்சேன் உங்களத்தான் நெஞ்சுக்குள்ளே கரச்சேன் பஞ்சணை பொய்யில்ல கண்ணுக்குள்ள நானு அஞ்சன மைய வச்சேன் அப்ப கூட உங்களத்தான் நெனச்சேன்
ஆண் : அஞ்சு வண்ணம் ஏழு கொஞ்சும் முகத்துக்கு அஞ்சன மை எதுக்கு குளிக்கவும் மஞ்சக் கெழங்கு எதுக்கு அடி பஞ்சலோகம் சேர்த்து செஞ்ச செல கூட மிஞ்சலையே உனக்கு அழகுல மிஞ்சலையே உனக்கு
ஆண் : கட்ட கருவண்டு வட்ட விழியாலே சுட்டு எரிக்கிறியே ஆசைய தட்டி எழுப்புறியே மனக் கட்டுப்பாடு என்ன விட்டு போன அதன் காரணம் நீதானே அடி என் பூரண பொன்மானே
பெண் : மொட்டு மலராத தாமரப்பூ அது தொட்டுப் பறிக்காதே
பெண் : நந்தவனத்துல ஜோடி பறவைங்க பாடுறத கேட்டு ஆசை என்னை வாட்டுதுங்க போட்டு நந்தவனத்துல ஜோடி பறவைங்க பாடுறத கேட்டு ஆசை என்னை வாட்டுதுங்க போட்டு
ஆண் : சிந்தையிலே அந்த மன்மதன் செய்திடும் சித்து விளையாட்டு அது ஒரு சித்து விளையாட்டு
பெண் : வாட்டி வதைக்குது போட்டு மிதிக்குது ஏத்தி வச்ச பாரம் ஆச மொத்தம் எப்போது தீரும் ஆண் : கொட்டி முழங்கிடும் கெட்டி மேளச்சத்தம் எட்டு ஊரும் அலறும் தாலிய நான் கட்டப் போற நேரம்
பெண் : மொட்டு மலராத தாமரப்பூ அது தொட்டுப் பறிக்காதே மச்சான் என்னை கட்டிப் புடிக்காதே ஆண் : மனக் கட்டுப்பாடு என்ன விட்டு போன அதன் காரணம் நீதானே அடி என் பூரண பொன்மானே
பெண் : மொட்டு மலராத தாமரப்பூ அது தொட்டுப் பறிக்காதே