Mounam Enbadhu Kavithai

Mounam Enbadhu Kavithai Song Lyrics In English


ம்ம் ம்ம் ம்ம்ம்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்ம்ம் ம்ம் ம்ம்ம்

மௌனம் என்பது கவிதை மொழி இந்த மாங்குயில் பேசிடும் கண்கள் வழி மௌனம் என்பது கவிதை மொழி இந்த மாங்குயில் பேசிடும் கண்கள் வழி மாங்குயில் பேசிடும் கண்கள் வழிஆஆஆ

வார்த்தை இல்லாத பாடல் இது அன்பை வார்த்திடும் உண்மை காதல் இது வார்த்தை இல்லாத பாடல் இது அன்பை வார்த்திடும் உண்மை காதல் இது

கண்ணே உன் கண் மலரந்தால் காடெல்லாம் பூச்சொரியும் அன்பே நீ கை அணைத்தால் அங்கங்கே பால் வடியும்

மயங்கி மயங்கி தயங்கி தயங்கி தோளில் தோகை சாயும்போது திரும்ப திரும்ப விருந்து படைக்கும் நாளில் உறக்கம் இங்கு ஏது

மகராஜன் கையால் நானும் மணமாலை வாங்கிக் கொண்டேன் இளமானை மார்பில் நானும் இதமாக தாங்கிக் கொண்டேன்

விரல் நாகம் வருடிட உருகிடும் வேளை நானே கச்சேரி வேளை இது கை கொண்டு மீட்டிடவோ கல்யாண கீர்த்தனங்கள் ஒவ்வொன்றாய் காட்டிடவோ


மௌனம் என்பது கவிதை மொழி இந்த மாங்குயில் பேசிடும் கண்கள் வழி மாங்குயில் பேசிடும் கண்கள் வழிஈஈஈ

உனது பெயரை எனது உதடு நாளும் வேதம் போல ஓதும் உடலும் மனமும் உறவு நதியின் மேலே ஓடம் போல ஆடும்

நிஜம் இந்த பாசம் பந்தம் நிறம் மாறும் பூக்கள் அல்ல உனக்காக மண்ணில் வந்தேன் உனை விட்டு எங்கே செல்ல

பிறவிகள் பல வரும் பிரிவுகள் வாராதம்மா என் ஜீவன் மன்னவனே உன் வாசல் தேடி வரும் எந்நாளும் உன் நிழலாய் பின்னோடு ஓடி வரும்

மௌனம் என்பது கவிதை மொழி இந்த மாங்குயில் பேசிடும் கண்கள் வழி மாங்குயில் பேசிடும் கண்கள் வழிஆஆஆ

இருவர் : ம்ம் ம்ம் ம்ம்ம்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்ம்ம் ம்ம் ம்ம்ம்