Mounam Ennum Ragam |
---|
மௌனம் என்னும் ராகம் விழி பாடுதோ
மஞ்சள் மின்னும் தேகம் துணை தேடுதோ
இளவேனிற் காலம்தானே சிறு பூவில் ஊறும் தேனே
வாங்கவும் தாங்கவும் வேளை வந்ததோ
மௌனம் என்னும் ராகம் விழி பாடுதோ
மஞ்சள் மின்னும் தேகம் துணை தேடுதோ
இளவேனிற் காலம்தானே சிறு பூவில் ஊறும் தேனே
வாங்கவும் தாங்கவும் வேளை வந்ததோ
நீர் ஓடையென நீ ஓடி வர
நான் ஓடமென ஆடத்தான்
பூமேனியில் ஓர் பாதியை
மேலாடைகள் மூடத்தான்
நான் கொஞ்ச நீயும் கொஞ்ச
நாணங்கள் போகக் கூடும்
கண் பட்டு கைகள் பட்டு
காயங்கள் ஆகக் கூடும்
நான் தீண்டினால் நோய் தீர்வதை
நீ காணலாம் போக போக
மௌனம் என்னும் ராகம் விழி பாடுதோ
பூந்தென்றலென என் தாவணியை
நீ நீக்குவது கூடாது
என் காதலி என் கை வசம்
யார் கேட்பது இப்போது
ஏனிந்த அன்புத் தொல்லை
ஆசைக்கு எல்லை இல்லை
ஏகாந்த வேளை தானே
ஆரம்ப லீலைதானே
நான் வாடுவேன் போராடுவேன்
உன் பார்வைகள் தூண்ட தூண்ட
மௌனம் என்னும் ராகம் விழி பாடுதோ
மஞ்சள் மின்னும் தேகம் துணை தேடுதோ
இளவேனிற் காலம்தானே சிறு பூவில் ஊறும் தேனே
வாங்கவும் ஹ்ம்
தாங்கவும் ஹ்ம்
வேளை வந்ததோ