Mounam Kalaiyatho Swami |
---|
மௌனம் கலையாதோ சுவாமி மௌனம் கலையாதோ சுவாமி இது மழையை எதிர்ப்பார்த்து மயங்கும் உடல் வேர்த்து தணலாய் கொதிக்கின்ற பூமிஈ
மௌனம் கலையாதோ சுவாமி இது மழையை எதிர்ப்பார்த்து மயங்கும் உடல் வேர்த்து தணலாய் கொதிக்கின்ற பூமிஈ
மௌனம் கலையாதோ சுவாமி
இதழோரம் நகையாட இமையோரம் விழியாட இளவேனிற் நிலவாடவே கனி தாங்கும் கொடியாட பனி தூங்கும் மலராட கலை மானும் இணையாடவே
இதழோரம் நகையாட இமையோரம் விழியாட இளவேனிற் நிலவாடவே கனி தாங்கும் கொடியாட பனி தூங்கும் மலராட கலை மானும் இணையாடவே
நிழல் மேகமும் கூந்தலில் ஆடி வர மணிமேகலை நூலிடை மூடி வர இந்த மேனகை மேனியும் கோடி பெற நவ மாமுனி சந்நிதி தேடி வர திருவாய் மலர்ந்திட வேண்டும்ம்ம்ம்ம்
மௌனம் கலையாதோ சுவாமி இது மழையை எதிர்ப்பார்த்து மயங்கும் உடல் வேர்த்து தணலாய் கொதிக்கின்ற பூமிஈ
வசந்த காலங்கள் இதுபோல் வாசல் தேடி வருமோ நெஞ்சில் விளைந்த ஞானங்கள் எனைப் போல் ராஜபோகம் தருமோ
எழுந்து வாருங்கள் சுகங்கள் மேலும் மேலும் மலர கண்ணை திறந்து பாருங்கள் எதிரில் தேவதேவி உலவ
கல்லும் கனியாகும் முள்ளும் மலராகும் கன்னி மயிலாடும் வேளையில் உள்ளம் உருகாதோ வெள்ளம் பெருகாதோ ஒட்டி உறவாடும் லீலையில்
தவத்தை கலைக்க வந்த தேவதை தழுவி பொழிய வந்த தேன் மழை உலகை மயக்கும் வண்ணப்பூனகை உதட்டில் எடுத்து வந்த மேனகைமேனகைமேனகை