Mounathil Vilayaadum |
---|
மௌனத்தில் விளையாடும்
மனசாட்சியே
மௌனத்தில் விளையாடும்
மனசாட்சியே
ஆயிரம் நினைவாகி
ஆனந்தக் கனவாகி
ஆயிரம் நினைவாகி
ஆனந்தக் கனவாகி
காரியம் தவறானால்
கண்களில் நீராகி
மௌனத்தில் விளையாடும்
மனசாட்சியே மனசாட்சியே
ரகசியச் சுரங்கம் நீ
நாடக அரங்கம் நீ
ரகசியச் சுரங்கம் நீ
நாடக அரங்கம் நீ
சோதனைக் களம் அல்லவா
நெஞ்சே துன்பத்தின் தாய் அல்லவா
ஒரு கணம் தவறாகி
பல யுகம் துடிப்பாயே
ஊமையின் பரிபாஷை
கண்களில் வடிப்பாயே
ஊமையின் பரிபாஷை
கண்களில் வடிப்பாயே
மௌனத்தில் விளையாடும்
மனசாட்சியே
ஆயிரம் நினைவாகி
ஆனந்தக் கனவாகி
காரியம் தவறானால்
கண்களில் நீராகி
உண்மைக்கு ஒரு சாட்சி
பொய் சொல்ல பலசாட்சி
உண்மைக்கு ஒரு சாட்சி
பொய் சொல்ல பலசாட்சி
யாருக்கும் நீயல்லவா
நெஞ்சே மனிதனின் நிழல் அல்லவா
ஆசையில் கல்லாகி
அச்சத்தில் மெழுகாகி
யார் முகம் பார்த்தாலும்
ஐயத்தில் தவிப்பாய் நீ
யார் முகம் பார்த்தாலும்
ஐயத்தில் தவிப்பாய் நீ
மௌனத்தில் விளையாடும்
மனசாட்சியே
ஆயிரம் நினைவாகி
ஆனந்தக் கனவாகி
காரியம் தவறானால்
கண்களில் நீராகி
மௌனத்தில் விளையாடும்
மனசாட்சியே மனசாட்சியே