Mudhal Murai

Mudhal Murai Song Lyrics In English


முதல் முறை உன்னை பார்த்தபோதே
பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ
உலகத்திலே உன் முகம்தான் பிடிக்கிறதே

கனவினில் உன்னை பார்க்கும் போதும்
அருகினில் என்னை பார்க்க வேண்டும்
உன் அருகே நான் இருந்தால் சிலிர்கிறதே

நீ விளையாட்டு பிள்ளை
உனக்கு நான் தலையாட்டும் பொம்மை
எனை தாயை போல
தாங்க வேண்டும் மடியினிலே

முதல் முறை உன்னை பார்த்தபோதே
பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ
உலகத்திலே உன் முகம்தான் பிடிக்கிறதே

நீ அருகில் தூங்கும் நேரமே
வானிலையும் மாறி போகுதே
நீயும் நினைத்தால் வானவில்
வந்து விடுமே

உன் மனதில் தோன்றும் வார்த்தையே
என் உதடும் கூற வேண்டுமே
உன்னை நினைத்தால் வாழ்விலே
என்றும் சுகமே

உன்னுடன் இருப்பதால்
உயிருடன் இருக்கிறேன்

உனக்கென வேண்டுமா
உயிரையும் தருகிறேன்

நான் உன் மூச்சில் வாழும் வரம் அது
எந்நாளும் போதும்
நீ சூடும் பூவும் வாடும் போது
வலித்திடுமே


முதல் முறை உன்னை பார்த்தபோதே
பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ
உலகத்திலே உன் முகம்தான் பிடிக்கிறதே



நீ நடந்து போகும் வேளையில்
கால் வலிக்கும் என்று கலங்குவேன்
தோளில் சுமந்தே தங்குவேன்
உன்னை தினமே

தோளிரண்டில் என்னை தூக்கினால்
நாள் கணக்கில் அங்கு தூங்குவேன்
நானும் உனையே தாங்குவேன்
நெஞ்சில் தினமே

சூரியன் உதிப்பதே
உன் முகம் கனவே

பூமியில் பிறந்ததே
உன்னுடன் வாழவே

கரு மழை மேகம் யாவும்
இறங்கியே உன்னை தீண்ட ஏங்கும்
இனி கோயில் தேடி போக மாட்டேன்
தெய்வமும் நீ

முதல் முறை உன்னை பார்த்தபோதே
பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ
உலகத்திலே உன் முகம்தான் பிடிக்கிறதே