Mukkanigal

Mukkanigal Song Lyrics In English


பொன் மகளே உன் பொறுமை
பூமிக்கே பொறுக்கல்லையோ
பூவிருந்தும் பொட்டிருந்தும்
மௌனம்தான் உன் நிலையோ

எங்கிருந்து உனக்கழைப்பு
எப்படித்தான் வந்து விடும்
எங்களிடமிருந்து உன்னை
எந்த தெய்வம் பிரித்து விடும்

முக்கனிகள் சேர்ந்திருக்க தட்டாக இருந்தாயே
மூன்று நதி கலந்திருக்க கடலாக அமைந்தாயே
தியாகத்தின் உச்சியிலே நீயொரு கலசமம்மா
தெய்வத்தின் வாசலிலே நீயொரு தீபமம்மா
நீயொரு தீபமம்மா


தரணியிலே பெண்களெல்லாம்
தாயாவதில்லையம்மா
தாயாகும் பெண்களெல்லாம்
நீயாவதில்லையம்மா

குடும்பம் என்னும் கோயில்கள்
ஆயிரம் ஆயிரம்
குலமகள் யாவரும் ஒவ்வொரு கோபுரம்
நாற்புறம் ஓங்கிய கோபுரங்கள்
நடுவில் தங்ககோபுரம்
நல்லவர்கள் மத்தியிலே நீ தங்க கோபுரம்
நீ தங்க கோபுரம்நீ தங்க கோபுரம்