Muthu Muthu Therottam |
---|
முத்து முத்து தேரோட்டம்
என்னை மோகம் தாலாட்டும்
எந்தன் தாகம் என்று தீரும்
இதை நீ கேட்டு வா தென்றலே
முத்து முத்து தேரோட்டம்
என்னை மோகம் தாலாட்டும்
எந்தன் தாகம் என்று தீரும்
இதை நீ கேட்டு வா தென்றலே
நெஞ்ச வானத்தில் நினைவு மேகங்கள்
நாளும் ஊர்கோலம் போகும்
இன்ப ராகத்தில் இரவு நேரத்தில்
பாடும் பாட்டொன்று தேடும்
அதன் பெயர் தான் விரகம்
எந்த தினம் தான் விலகும்
பதில் நீ தான் கேளாயோ
பதில் நீ தான் கேளாயோ
முத்து முத்து தேரோட்டம்
என்னை மோகம் தாலாட்டும்
எந்தன் தாகம் என்று தீரும்
இதை நீ கேட்டு வா தென்றலே
கடலில் சேராத கங்கை எங்குண்டு
இன்னும் ஏன் இந்த மௌனம்
உறவு தேடாத உள்ளம் எங்குண்டு
என்ன தான் உந்தன் எண்ணம்
என்றும் இளமை இனிமை
இந்தத் தனிமை கொடுமை
எந்தன் ஏக்கம் தீராயோ
எந்தன் ஏக்கம் தீராயோ
முத்து முத்து தேரோட்டம்
என்னை மோகம் தாலாட்டும்
எந்தன் தாகம் என்று தீரும்
இதை நீ கேட்டு வா தென்றலே
இதை நீ கேட்டு வா தென்றலே