Mutrathu Maadapura

Mutrathu Maadapura Song Lyrics In English


முச்சத்து மாடப் புறா
காதலுக்கு தூதொண்ணு போய் வருமா
முச்சத்து மாடப் புறா
காதலுக்கு தூதொண்ணு போய் வருமா
சொக்குற எம் மனச
மாமனுக்கு காதுல ஓதிடுமா
முத்த மழையினில் ஆடை கட்ட
முந்திரித் தோப்பினில் வேலி கட்ட
தாமதம் ஏன் என்று கேளடி தாலி கட்ட ஓ

முற்றத்து மாடப் புறா
காதலுக்கு தூதொண்ணு போய் வருமா
சொக்குற எம் மனச
சுந்தரிக்கு காதுல ஓதிடுமா

தந்ததத் தம்தம் தந்ததத் தம்தம்
தந்ததத் தம்தம் தந்ததத் தம்
தந்ததத் தம்தம் தந்ததத் தம்தம்
தந்ததத் தம்தம் தந்ததத் தம்

கட்டளைக்கு தினம் கட்டுப்படுகிற
கட்டழகி எனக்கு
உன் கட்டுக் கதை எதற்கு ஓஹொ

ஓஹொ

ஓஹொ

தொட்டுத் தழுவிட சுற்றி வருகிற
கட்டிக் கரும்புனக்கு
வீண் அச்சம் இனி எதற்கு

நீருக்கும் வேருக்கும்
பேதம் இல்லை
வேறெதும் நான் பேச வார்த்தை இல்லை

ஆருயிர் காவலனே
உன் காவல் தேடித்தான்
தேயுது வான் பிறையே

ஆடிடும் காவிரியே
நீ வந்து கூடத்தான்
பாடுது வாலிபமே

வா வாடிடுதே
வாச முல்லை
நீ தொடத் தாமதம் ஏன்

ஓ முற்றத்து மாடப் புறா
காதலுக்கு தூதொண்ணு போய் வருமா
சொக்குற எம் மனச
சுந்தரிக்கு காதுல ஓதிடுமா

வெட்கம் வருகையில் பத்து நிலவென
வட்ட முகம் சிவக்க அந்த வெட்டி நிலவெதற்கு


ஓஹொ

ஓஹொ

முத்தக் கடலுக்குள்
முத்துக் குளித்திட திட்டம் இட்ட பிறகு
வீண் வெட்டிக் கதை எதற்கு

ராமனும் சீதைக்கு மாலை இட
மந்திரம் சொல்லிடும் வேளை எது

கேளடி தாமரையே
உன் நாணம் காணத்தான்
வாழ்ந்திடும் சூரியனே

ஆனந்த சூரியனே
உன்னோடு சேரத்தான்
பூத்திடும் தாமரையே

நான் என்னை இங்கே தந்து விட்டேன்
நம்புடீ சுந்தரியே

முச்சத்து மாடப் புறா
காதலுக்கு தூதொண்ணு போய் வருமா
சொக்குற எம் மனச
மாமனுக்கு காதுல ஓதிடுமா

முத்த மழையினில் ஆடை கட்ட
முந்திரித் தோப்பினில் வேலி கட்ட
நித்தம் தவிக்கிற சிட்டுக்குத் தாலி கட்ட ஓ

முச்சத்து மாடப் புறா
காதலுக்கு தூதொண்ணு போய் வருமா

சொக்குற எம் மனச
சுந்தரிக்கு காதுல ஓதிடுமா