Naadhar Mudi Melirukkum

Naadhar Mudi Melirukkum Song Lyrics In English


நாதர் முடி மேலிருக்கும்
நல்ல பாம்பே

நாதர் முடி மேலிருக்கும்
நல்ல பாம்பே
உனக்கு நல்ல பெயர் வைத்தவர் யார்
சொல்லு பாம்பே
நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்பே
உனக்கு நல்ல பெயர் வைத்தவர் யார்
சொல்லு பாம்பே
ஆதி சிவன் தலை அமர்ந்த ஆணவமா
ஆதி சிவன் தலை அமர்ந்த ஆணவமா
அவன் அங்கம் எல்லாம் விளையாடும் தைரியமா
அவன் அங்கம் எல்லாம் விளையாடும் தைரியமா

நாதர் முடி மேலிருக்கும்
நல்ல பாம்பே
உனக்கு நல்ல பெயர் வைத்தவர் யார்
சொல்லு பாம்பே

ஊர் கொடுத்த பால் குடித்து
உயிர் வளர்த்தாய்
பால் உண்ட சுவை மாறும் முன்னே
நன்றி மறந்தாய்

ஊர் கொடுத்த பால் குடித்து
உயிர் வளர்த்தாய்
பால் உண்ட சுவை மாறும் முன்னே
நன்றி மறந்தாய்
வஞ்சமற்ற தொண்டருக்கே
வஞ்சனை செய்தாய்
வஞ்சமற்ற தொண்டருக்கே
வஞ்சனை செய்தாய்
அவர் பிஞ்சு மகன் நெஞ்சினுக்கே
நஞ்சு கொடுத்தாய்
அவர் பிஞ்சு மகன் நெஞ்சினுக்கே
நஞ்சு கொடுத்தாய்


பெயருக்குத் தகுந்தார் போல்
மாறி விடு
எங்கள் பிள்ளையை மறுபடியும் வாழ விடு
பெயருக்குத் தகுந்தார் போல்
மாறி விடு
எங்கள் பிள்ளையை மறுபடியும் வாழ விடு

நெஞ்சம் மாறி விடு பிள்ளையை வாழ விடு
நெஞ்சம் மாறி விடு பிள்ளையை வாழ விடு
நெஞ்சம் மாறி விடு பிள்ளையை வாழ விடு
நெஞ்சம் மாறி விடு பிள்ளையை வாழ விடு
நெஞ்சம் மாறி விடு பிள்ளையை வாழ விடு
நெஞ்சம் மாறி விடு பிள்ளையை வாழ விடு
நெஞ்சம் மாறி விடு பிள்ளையை வாழ விடு

சங்கமம் அன்றொரு முத்தமிழ் பாடிய
சங்கரன் மீதினில் ஆணை
சங்கப் புலவர்கள் நாவில் அடங்கிய
செந்தமிழ் மீதினில் ஆணை
மங்கலக் குங்குமம் மஞ்சள் நிறைந்த
சங்கரி மீதினில் ஆணை
மாதொரு பாகன் சூடிய நாகப் பாம்பே
உன் மேல் ஆணை
தேவன் மீதில் ஆணை
அவன் திருவடி மீதும் ஆணை
திருமறை மீதில் ஆணை
என் திருநாவின் மேல் ஆணை
பண் மேல் ஆணை சொல் மேல் ஆணை
என் மேல் ஆணை உன் மேல் ஆணை