Naadodi Paattu Paada |
---|
(ஆர் ஆனந்த், கோபால் ராவ் மற்றும் ஷலீன் சர்மா)
நாடோடி பாட்டு பாட
தந்தன தந்தன தாளம்
நாடெங்கும் காதலாலே
நெஞ்சினில் ஆயிரம் தாளம்
நாடோடி பாட்டு பாட
தந்தன தந்தன தாளம்
நாடெங்கும் காதலாலே
நெஞ்சினில் ஆயிரம் தாளம்
இருபது வயதில்
வருவது தானா காதல்
அறுபது வரையில்
தொடர்வது தானே காதல்
சிரிக்கிற போது
சிரிப்பது தானா காதல்
அழுகிற போது
ஆறுதல் தானே காதல் ஹேய்
காதலை நான் பாடவா
பூவிலே தேன் தேடவா
காதலை நான் பாடவா ஹேய்
பூவிலே தேன் தேடவா
கண்ணை மெல்ல மூடி
சாய்ந்துகொள்ளும் போது
மடியாக வேண்டுமே
தட்டுதடுமாறி
சோர்ந்து விழும் போது
பிடியாக வேண்டுமே
உன் உள்ளம் நான் கண்டு
என் உள்ளம் நீ கண்டு
உனக்காக நான் உண்டு
என்று வாழும்
காதல் தானே காதல்
மலர் விட்டு மலரை
தாவுவதான் அல்ல காதல்
ஒருத்திக்கு ஒருவன்
என்பது தானே காதல் ஹேய்
காதலை நான் பாடவா
பூவிலே தேன் தேடவா
ஏஏஏ
தந்தன தானே தானனே
ஹேய் தந்தன தானே தானனே
கங்கை நதி என்ன
காவேரி என்ன
எல்லாமே பெண்மையே
நம்மை இங்கு நாளும்
தங்குகிற பூமி
அது கூட பெண்மையே
நாடாளும் ஆணுக்கும்
வீடாள பெண் வேண்டும்
கடல் போன்ற வாழ்வினில்
கலங்கரை விளக்கம் தானே பெண்மை
பெண்ணிடம் மனதை
கொடுத்து விட்டாலே போதும்
பௌர்ணமிதானே
வாழ்வில் எந்த நாளும் ஹேய்
காதலை நான் பாடவா
பூவிலே தேன் தேடவா
நாடோடி பாட்டு பாட
தந்தன தந்தன தாளம்
நாடெங்கும் காதலாலே
நெஞ்சினில் ஆயிரம் தாளம்