Naadodi Paattukkal |
---|
நாடோடிப் பாட்டுகள் நான் படிப்பேன்
பாட்டாலே நாட்டையும் நான் புடிப்பேன்
நாடோடிப் பாட்டுகள் நான் படிப்பேன்
பாட்டாலே நாட்டையும் நான் புடிப்பேன்
தமிழ்ப் பண்ணோடு வாழும்
இந்த மண்ணோட வாசம்
அது எம் பாட்டில் வீசும்
இங்கு எந்நாளும் பேசும் பேசும்
நாடோடிப் பாட்டுகள் நான் படிப்பேன்
பாட்டாலே நாட்டையும் நான் புடிப்பேன்
தென்றலும் வந்து தங்கிடும் வீடு
செந்தமிழ் நாட்டு சந்தனக் காடு
என் பாட்டு அரங்கேறும் இடம் ஆச்சு
தென்றலும் வந்து தங்கிடும் வீடு
செந்தமிழ் நாட்டு சந்தனக் காடு
என் பாட்டு அரங்கேறும் இடம் ஆச்சு
தென்னையத் தொட்டு புன்னையத் தொட்டு
துள்ளுற சிட்டு சொல்லுற மெட்டு
நான் பாட உருவான சுகமாச்சு
நாள் தோறும் பாட்டெடுப்பேன் ஊர் மயங்க
பாட்டாளி நான் எடுத்த பேர் விளங்க
ஏதேதோ ராகம் அது எப்போதோ தோணும்
அட தேனான கானம் நெஞ்சில் தானாக ஊறும்
நாடோடிப் பாட்டுகள் நான் படிப்பேன்
பாட்டாலே நாட்டையும் நான் புடிப்பேன்
காவடிச் சிந்து ராமணிச் சிந்து
கை வசம் மின்னும் கன்னிகள் உண்டு
ஏராளம் தமிழ்ப் பாட்டு தெரியாதா ஹா
காவடிச் சிந்து ராமணிச் சிந்து
கை வசம் மின்னும் கன்னிகள் உண்டு
ஏராளம் தமிழ்ப் பாட்டு தெரியாதா ஹா
நாட்டுப்புறத்து பாட்டப் படிச்சா
நாடி நரம்பு ஆடிக் குதிக்கும்
நான் பாடக் கேட்டாலே புரியாதா
தாலாட்ட தாயை விட்டா யார் இருக்கா
தாயார்க்கு பாட்டுச் சொல்லி யார் கொடுத்தா
தூளியிலே போட்டு அவ சொன்னாளே பாட்டு
ஆளானேன் நான்தான் அதக் காதார கேட்டு
நாடோடிப் பாட்டுகள் நான் படிப்பேன்
பாட்டாலே நாட்டையும் நான் புடிப்பேன்
நாடோடிப் பாட்டுகள் நான் படிப்பேன்
பாட்டாலே நாட்டையும் நான் புடிப்பேன்
தமிழ்ப் பண்ணோடு வாழும்
இந்த மண்ணோட வாசம்
அது எம் பாட்டில் வீசும்
இங்கு எந்நாளும் பேசும் பேசும்
நாடோடிப் பாட்டுகள் நான் படிப்பேன்
பாட்டாலே நாட்டையும் நான் புடிப்பேன்