Naal Ondrum Pozhudhu |
---|
நாளொன்றும் பொழுதொன்றும்
செல்லச் செல்ல
என் நாயகன் பெயர் தன்னைச்
சொல்லச் சொல்ல
நாளொன்றும் பொழுதொன்றும்
செல்லச் செல்ல
என் நாயகன் பெயர் தன்னைச்
சொல்லச் சொல்ல
பாலை வனத்துப் பறவையைப்போல்
குரல் பாடுதம்மா உள்ளம் வாடுதம்மா
பாலை வனத்துப் பறவையைப்போல்
குரல் பாடுதம்மா உள்ளம் வாடுதம்மா
நாளொன்றும் பொழுதொன்றும்
செல்லச் செல்ல
என் நாயகன் பெயர் தன்னைச்
சொல்லச் சொல்ல
காலத்திலே கொஞ்சம் வீணாக
எந்தன் கண்ணை இமை தொட்டு நாளாக
காலத்திலே கொஞ்சம் வீணாக
எந்தன் கண்ணை இமை தொட்டு நாளாக
நீல விழிகளும் ஆறாக
என் நெஞ்சே எனக்குப் பகையாக
நாளொன்றும் பொழுதொன்றும்
செல்லச் செல்ல
என் நாயகன் பெயர் தன்னைச்
சொல்லச் சொல்ல
மாலைக்கு நான் செய்த தீமை என்ன
அதி காலைக்கு நான் செய்த நன்மை என்ன
மாலைக்கு நான் செய்த தீமை என்ன
அதி காலைக்கு நான் செய்த நன்மை என்ன
மாலையில் தென்றல் கொதிப்பதென்ன
அதி காலையில் உள்ளம் தெளிவதென்ன
நாளொன்றும் பொழுதொன்றும்
செல்லச் செல்ல
என் நாயகன் பெயர் தன்னைச்
சொல்லச் சொல்ல
சூடாத குழலுக்கு மலர் எதற்கு
என்றும் தூங்காத கண்ணுக்கு மை எதற்கு
சூடாத குழலுக்கு மலர் எதற்கு
என்றும் தூங்காத கண்ணுக்கு மை எதற்கு
தேறாத நெஞ்சுக்கு நினைவெதற்கு
தேறாத நெஞ்சுக்கு நினைவெதற்கு
ஒன்று சேராத உடலுக்கு உயிர் எதற்கு
தேறாத நெஞ்சுக்கு நினைவெதற்கு
ஒன்று சேராத உடலுக்கு உயிர் எதற்கு
நாளொன்றும் பொழுதொன்றும்
செல்லச் செல்ல
என் நாயகன் பெயர் தன்னைச்
சொல்லச் சொல்ல
பாலை வனத்துப் பறவையைப்போல்
குரல் பாடுதம்மா உள்ளம் வாடுதம்மா
நாளொன்றும் பொழுதொன்றும்
செல்லச் செல்ல
என் நாயகன் பெயர் தன்னைச்
சொல்லச் சொல்ல