Naalai Naalai Sad

Naalai Naalai Sad Song Lyrics In English


நாளை நாளை என்றிருந்தேன்
நல்ல நேரம் பார்த்து வந்தேன்
தத்தித் தத்தி ஓடி வந்து
முத்து முத்துப் புன்னகையைத் தேடினேன்
அதை இங்கே கண்டேன்

ஊரிலுள்ள பிள்ளைக்கெல்லாம்
அன்னையை பார்த்தேன்
நான் ஒருவன் மட்டும் அன்னையின்றி
எப்படி வந்தேன்
ஊரிலுள்ள பிள்ளைக்கெல்லாம்
அன்னையை பார்த்தேன்
நான் ஒருவன் மட்டும் அன்னையின்றி
எப்படி வந்தேன்

கோயில் பார்த்து கண்ணீரோடு
கும்பிடு போட்டேன்
என் தாயை மட்டும் காட்டு என்று
சாமியை கேட்டேன்
சாமியை கேட்டேன்



நாளை நாளை என்றிருந்தேன்
நல்ல நேரம் பார்த்து வந்தேன்
தத்தித் தத்தி ஓடி வந்து
முத்து முத்துப் புன்னகையைத் தேடினேன்
அதை இங்கே கண்டேன்

வீணை என்று மீட்ட வந்தேன்
மத்தளமானாள்
மேடை போட்டு காத்திருந்தேன்
தத்துவமானாள்
வீணை என்று மீட்ட வந்தேன்
மத்தளமானாள்
மேடை போட்டு காத்திருந்தேன்
தத்துவமானாள்


இமையை தந்த பாவை எந்தன்
விழிகளை கேட்டாள்
இதயமெங்கும் ஆணிக் கொண்டு
சிலுவை வடித்தாள்
சிலுவை வடித்தாள்

நாளை நாளை என்றிருந்தேன்
நல்ல நேரம் பார்த்து வந்தேன்
தத்தித் தத்தி ஓடி வந்து
முத்து முத்துப் புன்னகையைத் தேடினேன்
அதை இங்கே கண்டேன்

உதயமாகும் நேரம் என்று
கிழக்கினில் நின்றேன்
அவள் பொழுதுபோகும் நேரம் என்று
மேற்கினில் சென்றாள்
உதயமாகும் நேரம் என்று
கிழக்கினில் நின்றேன்
அவள் பொழுதுபோகும் நேரம் என்று
மேற்கினில் சென்றாள்

அஸ்தமன சூரியன் என்று
அவளை சொல்லவா
நான் அவளை வெல்ல முடியவில்லை
விதியை வெல்லவா
விதியை வெல்லவா

நாளை நாளை என்றிருந்தேன்
நல்ல நேரம் பார்த்து வந்தேன்
தத்தித் தத்தி ஓடி வந்து
முத்து முத்துப் புன்னகையைத் தேடினேன்
அதை இங்கே கண்டேன்