Naalai Namoru Rajangam |
---|
இசை அமைப்பாளர் : எம் எஸ் விஸ்வநாதன்
நாளை நாமொரு ராஜாங்கம் அமைப்போம்
ஆண்டு பாருங்கள் தோழர்களே
நாளை நாமொரு ராஜாங்கம் அமைப்போம்
ஆண்டு பாருங்கள் தோழர்களே
நாளை எண்ணி எண்ணி நடத்துங்கள் வாழ்க்கை
நாளை எண்ணி எண்ணி நடத்துங்கள் வாழ்க்கை
காலம் உங்களின் கைகளின் மேலே
அனைவரும் : காலம் உங்களின் கைகளின் மேலே
நாளை நாமொரு ராஜாங்கம் அமைப்போம்
ஆண்டு பாருங்கள் தோழர்களே
ராமன் ஆளட்டும் சோமன் ஆளட்டும்
ஆண்டாலென்ன
காட்டு மான்கள் போல் நாமும் வாழுவோம்
வாழ்ந்தாலென்ன
இந்த ஆறோடு நீரோடும் நிலம் காக்க
நாம் அறிவோடு வாழ்வது குலம் காக்க
இந்த ஆறோடு நீரோடும் நிலம் காக்க
நாம் அறிவோடு வாழ்வது குலம் காக்க
தாமரை கொண்ட தண்ணீரும்
தன்னறிவற்ற உன் வாழ்வும்
நிம்மதி கொள்ள முடியாது
ஹொ ஹோஓஓஓ
நாளை எண்ணி எண்ணி
நடத்துங்கள் வாழ்க்கை
காலம் உங்களின் கைகளின் மேலே
அனைவரும் : காலம் உங்களின் கைகளின் மேலே
மழையை வெயில் என்றும் மகனை
தந்தை என்றும் சொன்னாலென்ன
மனது சொன்னபடி கால்கள்
போனபடி போனாலென்ன
நீயும் ஊரோடு சேராமல் முடியாது
காலம் உனக்காக தனியாக நடக்காது
சோறு படைக்கும் சொர்க்கங்கள்
பூமியில் உள்ள இன்பங்கள்
தேடி நடந்து செல்லுங்கள்
ஓஹோஹோஓஓஓஓஓஒ
நாளை நாமொரு ராஜாங்கம் அமைப்போம்
ஆண்டு பாருங்கள் தோழர்களே
மனிதன் பாவங்களை மனிதன்
கேட்பதில்லை ஆனாலென்ன
பொறுத்து பார்த்த பின்பு இறைவன்
கேட்பதுண்டு கேட்டாலென்ன
எவர் கேட்டாலும் நான் கேட்க முடியாது
எந்த பாவங்கள் ஜீவனுக்கு தெரியாது
ஆடுவதென்று நீயாடு பாடுவதென்று நீ பாடு
ஓடுவதென்று நீ ஓடு
ஓஹோஹோஓஓஓஓஓஓ
நாளை எண்ணி எண்ணி நடத்துங்கள் வாழ்க்கை
காலம் உங்களின் கைகளின் மேலே
அனைவரும் : காலம் உங்களின் கைகளின் மேலே
நாளை நாமொரு ராஜாங்கம் அமைப்போம்
ஆண்டு பாருங்கள் தோழர்களே