Naalellam Unthan Thirunale

Naalellam Unthan Thirunale Song Lyrics In English


திருவேங்கடத்து முடியரசே
சீரார் கருணைத் திருமாலே
பொருளாய் எழுந்த முழுமுதலே
புவனங்காக்கும் பெருமாளே

அருளால் உலகை அளந்தவனே
அன்பர் பிணிக்கு அருமருந்தே
இறைவா உன்னைப் பாடுங்கால்
இன்பம் பொங்கும் என் மனமே

நாளெல்லாம் உந்தன் திருநாளே வரும்
நாளெல்லாம் உந்தன் திருநாளே
மலை நாடாளும் ஏழுமலைப் பெருமாளே
மலை நாடாளும் ஏழுமலைப் பெருமாளே
நாளெல்லாம் உந்தன் திருநாளே வரும்
நாளெல்லாம் உந்தன் திருநாளே

உன் நாமங்கள் கூறிவிட்டால் ஒரு கணமே
அவர் நாடிய வினைன் தீர்க்கும் நாரணனே
உன் நாமங்கள் கூறிவிட்டால் ஒரு கணமே
அவர் நாடிய வினைன் தீர்க்கும் நாரணனே

நாளெல்லாம் உந்தன் திருநாளே வரும்
நாளெல்லாம் உந்தன் திருநாளே

மலைபோல வரும் துன்பம்
பனிபோல மறைந்தோடும்
மலையேறி வருவோர்க்கு மன்னா
மலைபோல வரும் துன்பம்
பனிபோல மறைந்தோடும்
மலையேறி வருவோர்க்கு மன்னா
நலமில்லை என்றாலும் பலமில்லை என்றாலும்
நானென்று உயிர் ஊட்டும் கண்ணா
உடல் நலமில்லை என்றாலும் பலமில்லை என்றாலும்
நானென்று உயிர் ஊட்டும் கண்ணா


நாளெல்லாம் உந்தன் திருநாளே வரும்
நாளெல்லாம் உந்தன் திருநாளே

முக்கண்ணன் மைத்துனனே மாயக்கண்ணனனே
முக்தி தரும் சக்திக்கு சொந்த அண்ணனே
முக்கண்ணன் மைத்துனனே மாயக்கண்ணனனே
முக்தி தரும் சக்திக்கு சொந்த அண்ணனே
வேலவனின் மாமனான மாலவனே
வேங்கடத்தில் ஓங்கி நின்ற மூலவனே
வேலவனின் மாமனான மாலவனே
திருவேங்கடத்தில் ஓங்கி நின்ற மூலவனே

நாளெல்லாம் உந்தன் திருநாளே வரும்
நாளெல்லாம் உந்தன் திருநாளே

உண்டென்றும் இல்லையென்றும் சொல்வார்க்கு
உடன் காட்டும்
கண்கண்ட தெய்வமே வெங்கடேசா
உண்டென்றும் இல்லையென்றும் சொல்வார்க்கு
உடன் காட்டும்
கண்கண்ட தெய்வமே வெங்கடேசா
கொண்டாடும் அன்பர்க்கு குறைதீர செல்வங்கள்
தந்தாளும் தெய்வமே ஸ்ரீநிவாசா
கொண்டாடும் அன்பர்க்கு குறைதீர செல்வங்கள்
தந்தாளும் தெய்வமே ஸ்ரீநிவாசா

நாளெல்லாம் உந்தன் திருநாளே வரும்
நாளெல்லாம் உந்தன் திருநாளே
மலை நாடாளும் ஏழுமலைப் பெருமாளே
நாளெல்லாம் உந்தன் திருநாளே வரும்
நாளெல்லாம் உந்தன் திருநாளே