Naalellam Unthan Thirunale |
---|
திருவேங்கடத்து முடியரசே
சீரார் கருணைத் திருமாலே
பொருளாய் எழுந்த முழுமுதலே
புவனங்காக்கும் பெருமாளே
அருளால் உலகை அளந்தவனே
அன்பர் பிணிக்கு அருமருந்தே
இறைவா உன்னைப் பாடுங்கால்
இன்பம் பொங்கும் என் மனமே
நாளெல்லாம் உந்தன் திருநாளே வரும்
நாளெல்லாம் உந்தன் திருநாளே
மலை நாடாளும் ஏழுமலைப் பெருமாளே
மலை நாடாளும் ஏழுமலைப் பெருமாளே
நாளெல்லாம் உந்தன் திருநாளே வரும்
நாளெல்லாம் உந்தன் திருநாளே
உன் நாமங்கள் கூறிவிட்டால் ஒரு கணமே
அவர் நாடிய வினைன் தீர்க்கும் நாரணனே
உன் நாமங்கள் கூறிவிட்டால் ஒரு கணமே
அவர் நாடிய வினைன் தீர்க்கும் நாரணனே
நாளெல்லாம் உந்தன் திருநாளே வரும்
நாளெல்லாம் உந்தன் திருநாளே
மலைபோல வரும் துன்பம்
பனிபோல மறைந்தோடும்
மலையேறி வருவோர்க்கு மன்னா
மலைபோல வரும் துன்பம்
பனிபோல மறைந்தோடும்
மலையேறி வருவோர்க்கு மன்னா
நலமில்லை என்றாலும் பலமில்லை என்றாலும்
நானென்று உயிர் ஊட்டும் கண்ணா
உடல் நலமில்லை என்றாலும் பலமில்லை என்றாலும்
நானென்று உயிர் ஊட்டும் கண்ணா
நாளெல்லாம் உந்தன் திருநாளே வரும்
நாளெல்லாம் உந்தன் திருநாளே
முக்கண்ணன் மைத்துனனே மாயக்கண்ணனனே
முக்தி தரும் சக்திக்கு சொந்த அண்ணனே
முக்கண்ணன் மைத்துனனே மாயக்கண்ணனனே
முக்தி தரும் சக்திக்கு சொந்த அண்ணனே
வேலவனின் மாமனான மாலவனே
வேங்கடத்தில் ஓங்கி நின்ற மூலவனே
வேலவனின் மாமனான மாலவனே
திருவேங்கடத்தில் ஓங்கி நின்ற மூலவனே
நாளெல்லாம் உந்தன் திருநாளே வரும்
நாளெல்லாம் உந்தன் திருநாளே
உண்டென்றும் இல்லையென்றும் சொல்வார்க்கு
உடன் காட்டும்
கண்கண்ட தெய்வமே வெங்கடேசா
உண்டென்றும் இல்லையென்றும் சொல்வார்க்கு
உடன் காட்டும்
கண்கண்ட தெய்வமே வெங்கடேசா
கொண்டாடும் அன்பர்க்கு குறைதீர செல்வங்கள்
தந்தாளும் தெய்வமே ஸ்ரீநிவாசா
கொண்டாடும் அன்பர்க்கு குறைதீர செல்வங்கள்
தந்தாளும் தெய்வமே ஸ்ரீநிவாசா
நாளெல்லாம் உந்தன் திருநாளே வரும்
நாளெல்லாம் உந்தன் திருநாளே
மலை நாடாளும் ஏழுமலைப் பெருமாளே
நாளெல்லாம் உந்தன் திருநாளே வரும்
நாளெல்லாம் உந்தன் திருநாளே