Naan Aanaiyittal

Naan Aanaiyittal Song Lyrics In English


நான் ஆணையிட்டால்
அது நடந்து விட்டால்

நான் ஆணையிட்டால்
அது நடந்து விட்டால் இங்கு
ஏழைகள் வேதனைப் பட
மாட்டார்

உயிர் உள்ள
வரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர்க் கடலிலே
விழமாட்டார்

நான் ஆணையிட்டால்
அது நடந்து விட்டால் இங்கு
ஏழைகள் வேதனைப் பட
மாட்டார்

உயிர் உள்ள
வரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர்க் கடலிலே
விழமாட்டார்

ஒரு தவறு
செய்தால் அதைத்
தெரிந்து செய்தால்
அவன் தேவன்
என்றாலும் விட
மாட்டேன்

உடல் உழைக்கச்
சொல்வேன் அதில்
பிழைக்கச் சொல்வேன்
அவர் உரிமைப் பொருள்களை
தொட மாட்டேன்

நான் ஆணையிட்டால்
அது நடந்து விட்டால் இங்கு
ஏழைகள் வேதனைப் பட
மாட்டார்

உயிர் உள்ள
வரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர்க் கடலிலே
விழமாட்டார்

சிலர் ஆசைக்கும்
தேவைக்கும் வாழ்வுக்கும்
வசதிக்கும் ஊரார் கால்
பிடிப்பார்

ஒரு மானமில்லை
அதில் ஈனமில்லை அவர்
எப்போதும் வால் பிடிப்பார்

எதிர் காலம்
வரும் என் கடமை
வரும் இந்தக் கூட்டத்தின்
ஆட்டத்தை ஒழிப்பேன்


பொது நீதியிலே
புதுப் பாதையிலே
வரும் நல்லோர்
முகத்திலே விழிப்பேன்

நான் ஆணையிட்டால்
அது நடந்து விட்டால் இங்கு
ஏழைகள் வேதனைப் பட
மாட்டார்

உயிர் உள்ள
வரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர்க் கடலிலே
விழமாட்டார்

இங்கு ஊமைகள்
ஏங்கவும் உண்மைகள்
தூங்கவும் நானா
பார்த்திருப்பேன்

ஒரு கடவுள்
உண்டு அவன் கொள்கை
உண்டு அதை எப்போதும்
காத்திருப்பேன்

முன்பு ஏசு
வந்தார் பின்பு காந்தி
வந்தார் இந்த மானிடர்
திருந்திட பிறந்தார்

இவர் திருந்தவில்லை
மனம் வருந்தவில்லை
அந்த மேலோர்
சொன்னதை மறந்தார்

நான் ஆணையிட்டால்
அது நடந்து விட்டால் இங்கு
ஏழைகள் வேதனைப் பட
மாட்டார்

உயிர் உள்ள
வரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர்க் கடலிலே
விழமாட்டார்