Naan Ethanukku Ethanada |
---|
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
நான் எத்தனுக்கு எத்தனடா சித்தனுக்கு சித்தனடா எல்லாம் தெரிஞ்சவண்டா நான் எத்தனுக்கு எத்தனடா சித்தனுக்கு சித்தனடா எல்லாம் தெரிஞ்சவண்டா நல்ல பக்தனுக்கு பக்தனடா மக்கள் எந்தன் பக்கமடா நாலும் புரிஞ்சவண்டா நல்ல பக்தனுக்கு பக்தனடா மக்கள் எந்தன் பக்கமடா நாலும் புரிஞ்சவண்டா
ஊருக்கெது நீதியென்று சொல்லிக் குடுப்பேன் நீதிக்கொரு கேடு வந்தால் கிள்ளி எடுப்பேன் ஊருக்கெது நீதியென்று சொல்லிக் குடுப்பேன் நீதிக்கொரு கேடு வந்தால் கிள்ளி எடுப்பேன்
நான் எத்தனுக்கு எத்தனடா சித்தனுக்கு சித்தனடா எல்லாம் தெரிஞ்சவண்டா
கரையான்கள் தான் வாழ சிறு வீடு கட்டி வைக்க வந்தங்கு குடியேறும் விஷ நாகங்கள் கரையான்கள் தான் வாழ சிறு வீடு கட்டி வைக்க வந்தங்கு குடியேறும் விஷ நாகங்கள் திருக்கோயில் உருவாக்கி எளியோர்கள் வைத்திருக்க போலிகள் வரலாமோ பதில் கூறுங்கள் திருக்கோயில் உருவாக்கி எளியோர்கள் வைத்திருக்க போலிகள் வரலாமோ பதில் கூறுங்கள்
நான் எத்தனுக்கு எத்தனடா சித்தனுக்கு சித்தனடா எல்லாம் தெரிஞ்சவண்டா
உதிக்கின்ற கதிர் தன்னை மறைக்கின்ற மேகங்களே சூரியன் தன்னோடு விளையாடாதே உதிக்கின்ற கதிர் தன்னை மறைக்கின்ற மேகங்களே சூரியன் தன்னோடு விளையாடாதே எதிர்காலம் என்கின்ற பூங்காற்று வீசுதடா நேர்மைக்கு இனிமேலும் திரை போடாதே எதிர்காலம் என்கின்ற பூங்காற்று வீசுதடா நேர்மைக்கு இனிமேலும் திரை போடாதே
நான் எத்தனுக்கு எத்தனடா சித்தனுக்கு சித்தனடா எல்லாம் தெரிஞ்சவண்டா நல்ல பக்தனுக்கு பக்தனடா மக்கள் எந்தன் பக்கமடா நாலும் புரிஞ்சவண்டா
ஊருக்கெது நீதியென்று சொல்லிக் குடுப்பேன் நீதிக்கொரு கேடு வந்தால் கிள்ளி எடுப்பேன்