Naan Indri Yaar Vaaruvaar |
---|
நானன்றி யார் வருவார்
அன்பே நானன்றி யார் வருவார்
இள நங்கை உன்னை வேறு யார் தொடுவார்
நானன்றி யார் வருவார்
அன்பே நானன்றி யார் வருவார்
ஏன் இல்லை
ஏன் இல்லை இன்றொருவர் அருகில் வந்தார்
ஏன் இல்லை இன்றொருவர் அருகில் வந்தார்
முத்தம் எனக்கே என்றார்
சொன்னார் தந்தார்
பேசாமல் பேசுகின்றார்
வண்ணம் பாடாமல் பாடுகின்றார்
வண்ணப் பாவை உந்தன்
இதழ் கோவை தன்னில்
இந்த காயம் என்ன
வந்த மாயம் என்ன
வண்ணப் பாவை உந்தன்
இதழ் கோவை தன்னில்
இந்த காயம் என்ன
வந்த மாயம் என்ன
கூண்டுக்கிளி எடுத்து கொஞ்சினேன்
இதழ் கோவை என நினைத்துக் கொண்டதோ
கூண்டுக்கிளி எடுத்து கொஞ்சினேன்
இதழ் கோவை என நினைத்துக் கொண்டதோ
முத்தம் தந்ததோ சொந்தம் கொண்டதோ
இன்னும் சந்தேகமா
கண்ணே
கண்ணா
மாதென்னை யார் தொடுவார்
எந்தன் மன்னன் உமை அன்றி
யார் வருவார்
மாதென்னை யார் தொடுவார்
கன்னி மாலை கண்டும்
இன்பச் சோலை வந்தும்
இன்னும் கோபம் என்ன
மின்னும் நாணம் என்ன
நாணம் தடை பிறந்த உள்ளமே
அதில் ஆசை மடை கடந்த வெள்ளமே
இந்த நெஞ்சமே எந்தன் சொந்தமே
இன்பப் பண்பாடுவோம்
கண்ணே
கண்ணா
இருவர் : நாம் அன்றி யார் அறிவார்
அன்பே நாம் அன்றி யார் அறிவார்
இன்ப நலம் நாடும்
மண இன்பம் யார் பெறுவார்
நாமன்றி யாரறிவார்