Naan Kannillatha Pillai |
---|
இசை அமைப்பாளர் : ஜி தேவராஜன்
நான் கண்ணில்லாத பிள்ளை
இந்த மண்ணில் வாடும் முல்லை
இங்கு பாவப்பட்ட ஜென்மத்திற்கு
காவல் யாரும் இல்லை
நான் கண்ணில்லாத பிள்ளை
இந்த மண்ணில் வாடும் முல்லை
இங்கு பாவப்பட்ட ஜென்மத்திற்கு
காவல் யாரும் இல்லை
மகனே கேள் மகனே கேள் மகனே கேள்
இயேசு வருகிறார்
அவர் முடவருக்கும் குருடருக்கும் வாழ்வு தருகிறார்
தேவனவன் திருவடியை வணங்கிடு தம்பி
அவர் ஜீவனிடம் காட்டுகின்ற கருணையை நம்பி
மகனே கேள் மகனே கேள் மகனே கேள்
இயேசு வருகிறார்
அவர் முடவருக்கும் குருடருக்கும் வாழ்வு தருகிறார்
தேவனவன் திருவடியை வணங்கிடு தம்பி
அவர் ஜீவனிடம் காட்டுகின்ற கருணையை நம்பி
போதகரே போதகரே போதகரே
என்னை ரட்சித்து அருள்க
இந்த பாலகன் செய்த பாவத்தை போக்கி
பார்வையை நீ தருக என் பார்வையை நீ தருக
உன் பாவங்களை நான் வாங்கிக் கொள்கிறேன்
பாலகனே நீ எழுந்திடு
உன் பாரங்களை நான் தாங்கிக் கொள்கிறேன்
பார்வையை கொடுத்தேன் விழித்திடு
பார்வையை கொடுத்தேன் விழித்திடு
இயேசுவின் அருளால் கண்ணொளி வந்தது
தேவக்குமாரன் வாழியவே
வானம் தெரிகிறது பூமியும் தெரிகிறது
விழிகளில் பார்வை வந்தது
எல்லாம் எங்கள் இயேசுவின் மகிமை
இயேசு நாதா இயேசு நாதா இயேசு நாதா