Naan Kooppitta Kuralukku

Naan Kooppitta Kuralukku Song Lyrics In English


தேடிக் கிடைத்த பிள்ளை
தென்பட்ட வேளை
வாடிக் கிடப்பதென்ன வடிவேலா
உன்னருளை நாடி கதறுகையில்
நோக்காமல் உன் விழிகள்
மூடிக் கிடப்பதென்ன
சிவபாலா சிவபாலா சிவபாலா

நான் கூப்பிட்ட குரலுக்கு குமரா நீ
வாராமல் குன்றேறி நின்றென்ன புண்யம்
நான் கூப்பிட்ட குரலுக்கு குமரா நீ
வாராமல் குன்றேறி நின்றென்ன புண்யம்
என் குழந்தைக்கு உயிர் பிச்சை கொடுக்காமல்
இருந்தால் உன் கருணைக்கு விளையாதோ பாவம்
என் குழந்தைக்கு உயிர் பிச்சை கொடுக்காமல்
இருந்தால் உன் கருணைக்கு விளையாதோ பாவம்

தேனாயிரம் பாலாயிரம்
குடம் கொண்டு நீராட்டினேன்
தேனாயிரம் பாலாயிரம்
குடம் கொண்டு நீராட்டினேன்
மாணிக்கமும் வைடூரியமும்
நகை செய்து நான் பூட்டினேன்

வண்ணமுடி சூட ஒரு வைரமுடி தந்தேன்
நாள் முழுதும் காவடிகள் நான் சுமந்து வந்தேன்
வண்ணமுடி சூட ஒரு வைரமுடி தந்தேன்
நாள் முழுதும் காவடிகள் நான் சுமந்து வந்தேன்

பிஞ்சு முகம் கண்விழிக்க
பெற்ற மனம் வேண்ட
அஞ்சு முகம் பாராமல் ஆறுமுகம் என்ன
பிஞ்சு முகம் கண்விழிக்க
பெற்ற மனம் வேண்ட
அஞ்சு முகம் பாராமல் ஆறுமுகம் என்ன

நீயில்லை என்றால் நிலத்தில் தோன்றும்
பயிர் குலம் தழைப்பதுண்டோ உன்
நிழல் இல்லையென்றால் கருவில் விளையும்
உயிர் குலம் பிழைப்பதுண்டோ

நீயில்லை என்றால் நிலத்தில் தோன்றும்
பயிர் குலம் தழைப்பதுண்டோ உன்
நிழல் இல்லையென்றால் கருவில் விளையும்
உயிர் குலம் பிழைப்பதுண்டோ


தாய்க்கொரு தாயாய் தணிகை வாழும்
தலைவா நீ வருக இந்த
சேய் உயிர் பிழைக்க என்னுயிர் தருவேன்
இறைவா அருள் புரிக
சேய் உயிர் பிழைக்க என்னுயிர் தருவேன்
இறைவா அருள் புரிக

ஈராறு கண் ஈராறு கை
இருந்தென்ன உபகாரமோ
ஊரார்க்கு நீ உதவாவிடில்
தெய்வீக அவதாரமோ

ஈராறு கண் ஈராறு கை
இருந்தென்ன உபகாரமோ
ஊரார்க்கு நீ உதவாவிடில்
தெய்வீக அவதாரமோ

மையிருளில் மூழ்காமல்
மண்டபங்கள் மின்ன
நெய் விளக்கு நான் ஏற்றி கண்ட பலன் என்ன
உன்னுடைய சன்னதியில் ஒளி வீசும் ஜோதி
என் வாழ்வில் இருண்டாலோ
இது என்ன நீதி இது என்ன நீதி

பாபங்கள் செய்த ஏழை என் மீது
கோபத்தை களைந்து விடு
பாபங்கள் செய்த ஏழை என் மீது
கோபத்தை களைந்து விடு
உந்தன் எல்லை இல்லாத கருணையை காட்டி
பிள்ளையை பிழைக்க விடு
உந்தன் எல்லை இல்லாத கருணையை காட்டி
பிள்ளையை பிழைக்க விடு

வேல் கொண்ட முருகா விழி நீரால் உன்
பாதத்தை கழுவுகிறேன் தாய்
வேண்டிய வண்ணம் மழலையை காக்க
வாய் விட்டு கதறுகிறேன்
வேல் முருகா மால் மருகா ஆதரிப்பாய் ஆறுமுகா