Naan Manjalukku

Naan Manjalukku Song Lyrics In English


நான் மஞ்சளுக்கு நாத்து வச்சேன்
நல்லா வெளஞ்சுது
என் கண்ணம்மா நான் உன்ன பாத்தேன்
சொன்னா இனிக்குது

நான் மஞ்சளுக்கு நாத்து வச்சேன்
நல்லா வெளஞ்சுது
என் கண்ணம்மா நான் உன்ன பாத்தேன்
சொன்னா இனிக்குது

நான் பச்ச நெல்ல குத்தி வச்சேன்
பொங்கி வழிஞ்சுது
என் பட்டியில வச்ச பொட்டும்
எங்கும் மணக்குது

நான் மஞ்சளுக்கு நாத்து வச்சேன்
நல்லா வெளஞ்சுது
என் கண்ணைய்யா நான் உன்ன பாத்தேன்
சொன்னா இனிக்குது

நான் அச்சுவெல்லம் வாங்கி தாரேன்
வாயில் போட்டுக்கோ
நான் அந்தியில வாரேன் புள்ள
பாய போட்டுக்கோ

உன் அச்சுவெல்லாம் வேணுமுன்னா
நானே கேட்குறேன்
ஹே யாருகிட்ட வேலையெல்லாம்
நீயும் காட்டுற

நான் ஆமை வடை வாங்கி தாரேன்
கண்ணே கடிச்சுக்கோ
நீ அப்படியே என்ன கொஞ்சம்
கட்டி அணைச்சுக்கோ


ஒரு ஆமை வடை கீரை வடை
எல்லாம் எதுக்குங்க
நீ ஆசை வச்ச கண்ணு ரெண்டும்
என்ன சுடுதுங்க

நான் மல்லிகப்பூ வாங்கி வந்து
மானே கொடுக்கவா
என் மாமன் புள்ள கொண்டையில
நானே சொருகவா

நான் மல்லிகைப்பூ கேட்கறப்போ
வாங்கி கொடுங்கையா
இப்ப ஊரு கண்ணு பாக்குதுங்க
கைய விடுங்கையா

நான் காஞ்சி பட்டு வாங்கி வந்து
கட்டி விடட்டுமா
உன் கன்னத்துல கன்னம் வச்சு
முத்தம் இடட்டுமா

நீ பாக்கு வச்சு சேதி ஒன்னு
பார்த்து சொல்லைய்யா
உன் பக்க துணை நான் இருப்பேன்
இன்னும் என்னய்யா

ஆ ஹா ஆ ஹா ஏ ஹே
ஆ ஹா ஹாஆ