Naan Manthoppil

Naan Manthoppil Song Lyrics In English


நான் மாந்தோப்பில்
நின்றிருந்தேன் அவன்
மாம்பழம் வேண்டுமென்றான்
அதை கொடுத்தாலும்
வாங்கவில்லை இந்த கன்னம்
வேண்டுமென்றான்

நான் தண்ணீர்
பந்தலில் நின்றிருந்தேன்
அவள் தாகம் என்று
சொன்னாள்

நான் தன்னந்தனியாய்
நின்றிருந்தேன் அவள் மோகம்
என்று சொன்னாள் ஹோய்

நான் தண்ணீர்
பந்தலில் நின்றிருந்தேன்
அவள் தாகம் என்று
சொன்னாள்

நான் தன்னந்தனியாய்
நின்றிருந்தேன் அவள் மோகம்
என்று சொன்னாள்

ஒன்று கேட்டால்
என்ன கொடுத்தால் என்ன
குறைஞ்சா போய் விடும்
என்றான்

கொஞ்சம்
பார்த்தால் என்ன
பொறுத்தால் என்ன
மறந்தா போய்விடும்
என்றாள்

நான் மாந்தோப்பில்
நின்றிருந்தேன் அவன்
மாம்பழம் வேண்டுமென்றான்
அதை கொடுத்தாலும்
வாங்கவில்லை இந்த கன்னம்
வேண்டுமென்றான்

அவன் தாலி
கட்டும் முன்னாலே
தொட்டாலே போதும்
என்றே துடி துடிச்சான்



அவன் தாலி
கட்டும் முன்னாலே
தொட்டாலே போதும்
என்றே துடி துடிச்சான்

அவள் வேலி
கட்டும் முன்னாலே
வெள்ளாமை ஏது
என்றே கதை படிச்சா

அவன் காதலுக்கு
பின்னாலே கல்யாணம்
வருமா என்றே கையடிச்சான்


அவள் ஆகட்டும்
என்றே ஆசையில் நின்றே
அத்தானின் காதைக் கடிச்சா



நான் மாந்தோப்பில்
நின்றிருந்தேன் அவன்
மாம்பழம் வேண்டுமென்றான்
அதை கொடுத்தாலும்
வாங்கவில்லை இந்த கன்னம்
வேண்டுமென்றான்

அவன் பூவிருக்கும்
தேனெடுக்க பின்னாலே
வந்து வண்டாய் சிறகடிச்சான்



அவன் பூவிருக்கும்
தேனெடுக்க பின்னாலே
வந்து வண்டாய் சிறகடிச்சான்

அவள் தேனெடுக்க
வட்டமிடும் மச்சானை
பிடிக்க கண்ணாலே வலை
விரிச்சா

அவன் ஜோடி
குயில் பாடுவதை
சொல்லாமல் சொல்லி
மெதுவா அணைச்சுக்கிட்டான்

அவள் ஆடியிலே
பெண்ணாகி அஞ்சாறு
மாசத்துல அழகா
தெரிஞ்சுக்கிட்டா

ஆண் &

நான் மாந்தோப்பில்
நின்றிருந்தேன் அவன்
மாம்பழம் வேண்டுமென்றான்
அதை கொடுத்தாலும்
வாங்கவில்லை இந்த கன்னம்
வேண்டுமென்றான்