Naan Ondru Kettal |
---|
ஓ ஓ ஒஹோஹோ ஹோஹோ ஹோ
நான் ஒன்று கேட்டால் தருவாயா
முடிந்ததென்றால் அது முடியும் என்றால்
நிலவுக்கு கூட்டிப் போவாயா
நடந்திடுமா அது நடந்திடுமா
அன்பே கதை அல்லவோ
அன்பின் கதை சொல்லவோ
சேர்ந்து ஒரு பாடல் ஓ ஓ ஓ
நான் ஒன்று கேட்டால் தருவாயா
முடிந்ததென்றால் அது முடியும் என்றால்
நிலவுக்கு கூட்டிப் போவாயா
நடந்திடுமா அது நடந்திடுமா
கண்கள் எழுதும் ஒரு கடிதத்திலே
கண்ணமுதக் கவிதைகள் விளங்கியதா
கற்பனைகளை சொல்லும் கவிதைகளில்
சொல்வதென்றும் உண்மை இல்லை புரிகிறதா
என் பாடல் செல்லும் இடம்
எங்கே என நீயே சொல்வாய்
உன் பாடல் நான் சொல்லவோ
என் பாதை வேறல்லவோ
இதயம் தரையில் இறங்காது
இலைக்குச் சிறகு முளைக்காது
சங்கீத மொழி தூது
நான் ஒன்று சொல்வேன் கேட்பாயா
முடிந்ததென்றால் அது முடியும் என்றால்
நீ அந்த நிலவை மறப்பாயா
நடந்திடுமா அது நடந்திடுமா
வெண்ணிலவிலே உன்னை குடியமர்த்த
தோளில் இரு சிறகுகள் எனக்கில்லையே
குடியிருக்கும் சின்னக் குடிசையிலும்
தேன் நிலவு தென்றலுடன் செல்வதில்லையா
ஆதாரம் இல்லாமலே கூடாரம்
நிற்காதம்மா
ஆதாமின் ஆதாரம் தான்
ஏவாள் எனும் பெண்தானய்யா
வானம் கையில் அடங்காது
மௌன அலைகள் உறங்காது
சங்கீத மொழி தூது
நான் ஒன்று கேட்டால் தருவாயா
முடிந்ததென்றால் அது முடியும் என்றால்
நிலவுக்கு கூட்டிப் போவாயா
நடந்திடுமா அது நடந்திடுமா
அன்பே கதை அல்லவோ
அன்பின் கதை சொல்லவோ
சேர்ந்து ஒரு பாடல்
ஓ ஓ ஓ
நான் ஒன்று கேட்டால் தருவாயா
முடிந்ததென்றால் அது முடியும் என்றால்
நீ அந்த நிலவை மறப்பாயா
நடந்திடுமா அது நடந்திடுமா