Naan Ondru Ninaithen

Naan Ondru Ninaithen Song Lyrics In English


பாடலாசிரியர் : கண்ணதாசன்

நான் ஒன்று நினைத்தேன் அவன் ஒன்று நினைத்தான் நான் போகும் வழியை அவன் வந்து மறித்தான் அவன் வந்து மறித்தான்

நான் ஒன்று நினைத்தேன் அவன் ஒன்று நினைத்தான் நான் போகும் வழியை அவன் வந்து மறித்தான் அவன் வந்து மறித்தான்

கனியொன்று கேட்டேன் காயொன்று கொடுத்தான் கண்ணொன்று கேட்டேன் புண்ணாக படைத்தான் கனியொன்று கேட்டேன் காயொன்று கொடுத்தான் கண்ணொன்று கேட்டேன் புண்ணாக படைத்தான்

நினைவொன்று கேட்டேன் நெருப்பாக வளர்த்தான் நினைவொன்று கேட்டேன் நெருப்பாக வளர்த்தான் நிலவொன்று கேட்டேன் இருள் காண அழைத்தான்

நான் ஒன்று நினைத்தேன்


துணையொன்று கேட்டேன் சுகம் காண கொடுத்தான் சுகம் காணும்போதே வழி மாற்றி பிரித்தான் துணையொன்று கேட்டேன் சுகம் காண கொடுத்தான் சுகம் காணும்போதே வழி மாற்றி பிரித்தான்

அலை மோதும் மனதை தனியாக விடுத்தான் அலை மோதும் மனதை தனியாக விடுத்தான் அன்பான நெஞ்சுக்கு அபராதம் விதித்தான்

நான் ஒன்று நினைத்தேன் அவன் ஒன்று நினைத்தான் நான் போகும் வழியை அவன் வந்து மறித்தான் அவன் வந்து மறித்தான்

நான் ஒன்று நினைத்தேன்