Naan Paadiya Mudhal

Naan Paadiya Mudhal Song Lyrics In English


நான் பாடிய முதல் பாட்டு
இவள் பேசிய தமிழ்க் கேட்டு
நான் பாடிய முதல் பாட்டு
இவள் பேசிய தமிழ்க் கேட்டு
நான் கவிஞன் என்றால் அதெல்லாம்
இந்த அழகியின் முகம் பார்த்து
நான் கவிஞன் என்றால் அதெல்லாம்
இந்த அழகியின் முகம் பார்த்து

நான் பாடிய முதல் பாட்டு
இவள் பேசிய தமிழ்க் கேட்டு

கள்ளில் உண்டாகும் போதை
இவள் சொல்லில் உண்டாவதேனோ
கள்ளில் உண்டாகும் போதை
இவள் சொல்லில் உண்டாவதேனோ

தொட்டால் உண்டாகும் இன்பம்
கண்கள் பட்டால் உண்டாவதேனோ
தொட்டால் உண்டாகும் இன்பம்
கண்கள் பட்டால் உண்டாவதேனோ

இவள் காலடி நிழல் படும் நேரம்
மலர் போலே முள்ளும் மாறும்

நான் பாடிய முதல் பாட்டு
இவள் பேசிய தமிழ்க் கேட்டு

எதிரில் நின்றாடும்போது
இளம் மனதை பந்தாடும் மாது
எதிரில் நின்றாடும்போது
இளம் மனதை பந்தாடும் மாது

அருகில் வந்தாட வேண்டும்
அருகில் வந்தாட வேண்டும்
அதில் ஒரு கோடி பாடல் தோன்றும்

வண்ண ஆடைகள் மூடிய தேகம்
அதை கொஞ்சும் இளமை வேகம்


நான் பாடிய முதல் பாட்டு
இவள் பேசிய தமிழ்க் கேட்டு

கோயில் கொள்ளாத சிலையோ
இளம் கிளிகள் கொய்யாத கனியோ
கோயில் கொள்ளாத சிலையோ
இளம் கிளிகள் கொய்யாத கனியோ

ஏட்டில் இல்லாத கவியோ
இவள் எழுத்தில் வராத பொருளோ
ஏட்டில் இல்லாத கவியோ
இவள் எழுத்தில் வராத பொருளோ

மடல் வாழையைப் போல் இவள் மேனி
நகை சிந்தும் அழகு ராணி

நான் பாடிய முதல் பாட்டு
இவள் பேசிய தமிழ்க் கேட்டு
நான் கவிஞன் என்றால் அதெல்லாம்
இந்த அழகியின் முகம் பார்த்து

நான் பாடிய முதல் பாட்டு
இவள் பேசிய தமிழ்க் கேட்டு