Naan Paadiya Mudhal |
---|
நான் பாடிய முதல் பாட்டு
இவள் பேசிய தமிழ்க் கேட்டு
நான் பாடிய முதல் பாட்டு
இவள் பேசிய தமிழ்க் கேட்டு
நான் கவிஞன் என்றால் அதெல்லாம்
இந்த அழகியின் முகம் பார்த்து
நான் கவிஞன் என்றால் அதெல்லாம்
இந்த அழகியின் முகம் பார்த்து
நான் பாடிய முதல் பாட்டு
இவள் பேசிய தமிழ்க் கேட்டு
கள்ளில் உண்டாகும் போதை
இவள் சொல்லில் உண்டாவதேனோ
கள்ளில் உண்டாகும் போதை
இவள் சொல்லில் உண்டாவதேனோ
தொட்டால் உண்டாகும் இன்பம்
கண்கள் பட்டால் உண்டாவதேனோ
தொட்டால் உண்டாகும் இன்பம்
கண்கள் பட்டால் உண்டாவதேனோ
இவள் காலடி நிழல் படும் நேரம்
மலர் போலே முள்ளும் மாறும்
நான் பாடிய முதல் பாட்டு
இவள் பேசிய தமிழ்க் கேட்டு
எதிரில் நின்றாடும்போது
இளம் மனதை பந்தாடும் மாது
எதிரில் நின்றாடும்போது
இளம் மனதை பந்தாடும் மாது
அருகில் வந்தாட வேண்டும்
அருகில் வந்தாட வேண்டும்
அதில் ஒரு கோடி பாடல் தோன்றும்
வண்ண ஆடைகள் மூடிய தேகம்
அதை கொஞ்சும் இளமை வேகம்
நான் பாடிய முதல் பாட்டு
இவள் பேசிய தமிழ்க் கேட்டு
கோயில் கொள்ளாத சிலையோ
இளம் கிளிகள் கொய்யாத கனியோ
கோயில் கொள்ளாத சிலையோ
இளம் கிளிகள் கொய்யாத கனியோ
ஏட்டில் இல்லாத கவியோ
இவள் எழுத்தில் வராத பொருளோ
ஏட்டில் இல்லாத கவியோ
இவள் எழுத்தில் வராத பொருளோ
மடல் வாழையைப் போல் இவள் மேனி
நகை சிந்தும் அழகு ராணி
நான் பாடிய முதல் பாட்டு
இவள் பேசிய தமிழ்க் கேட்டு
நான் கவிஞன் என்றால் அதெல்லாம்
இந்த அழகியின் முகம் பார்த்து
நான் பாடிய முதல் பாட்டு
இவள் பேசிய தமிழ்க் கேட்டு