Naan Paadiya Paadalai |
---|
ஆஅஆஅ
ஆஆஆஆஆஅ
நான் பாடிய பாடலை மன்னவன் கேட்டான் படையுடனே வந்தான் பாடிய பாடலை மன்னவன் கேட்டான் படையுடனே வந்தான் என் வாடிய நெஞ்சை மன்னன் அறிந்தான் மலருடனே வந்தான் வாடிய நெஞ்சை மன்னன் அறிந்தான் மலருடனே வந்தான்
காதல் திருமகள் கண்ணீர் வடித்தாள் கனவினிலே கண்டான் காதல் திருமகள் கண்ணீர் வடித்தாள் கனவினிலே கண்டான் இரு கைவேல் கொண்டான் கண் வேல் கண்டான் காலத்திலே வந்தான் கைவேல் கொண்டான் கண் வேல் கண்டான் காலத்திலே வந்தான்
வந்தான் என்றதும் மங்கை முகத்தில் செந்தேன் பாய்ந்ததம்மா அவன் தருவான் ஒருநாள் பெறுவான் திருநாள் தாமரை மலர்ந்ததம்மா தருவான் ஒருநாள் பெறுவான் திருநாள் தாமரை மலர்ந்ததம்மா
இருவர் : ஹாஆஅஆஅ
இருவர் : காவிரிக் கடலில் பாய்ந்தது போலே கலந்து விட்டானம்மா இனி காவிரி என்றும் கடலிது என்றும் பேதம் இல்லையம்மா காவிரி என்றும் கடலிது என்றும் பேதம் இல்லையம்மா
இருவர் : ஹாஆஅஆஅ