Naan Paadum Ragam |
---|
இசை அமைப்பாளர் : ஆனந்த் சங்கர்
நான் பாடும் ராகம் ஆனந்த ராகம்தான்
சந்தோஷம்தானே வருவது சங்கீதம் தானே
இன்பங்கள் கொள்ளை நானிங்கு நானில்லை
சோகங்கள் இல்லை மலர்ந்தது ஆனந்த முல்லை
என்னோடு சேர்ந்து வானமும்
கானங்கள் பாடாதோ
அன்பான நெஞ்சம், தாலாட்ட
என் பெண்மை கண் மூடுதோ
நெஞ்சோடு கேள்வி கேளாமல்
நானிங்கு வாழ்கின்றேன்
சந்தோஷம் ஒன்றே காண்கின்றேன்
சொந்தங்கள் கொண்டாடினேன்
எல்லாமே மறந்து இன்பங்கள் சுமந்து
எப்போதும் பண்பாடினேன்
நான் பாடும் ராகம் ஆனந்த ராகம்தான்
சந்தோஷம்தானே வருவது சங்கீதம் தானே
அன்பென்னும் தீபம் ஏற்றினேன்
சொந்தங்கள் போகாது
பண்பான உள்ளம் பார்க்கின்றேன்
பந்தங்கள் மாறாதது
நேற்றென்ன வாழ்வில் நேர்ந்தது
என் நெஞ்சு அறியாது
இன்றோடு வாழ்வில் ஆனந்தம்
வேறென்ன நான் சொல்வது
தன்னைத்தான் மறந்து அன்பில்தான் விழுந்து
பெண்ணுள்ளம் பண்பாடுது
நான் பாடும் ராகம் ஆனந்த ராகம்தான்
சந்தோஷம்தானே வருவது சங்கீதம் தானே
இன்பங்கள் கொள்ளை நானிங்கு நானில்லை
சோகங்கள் இல்லை மலர்ந்தது ஆனந்த முல்லை