Naan Paartha

Naan Paartha Song Lyrics In English


நான் பாத்தா பைத்தியக்காரன்
உன் பாட்டனுக்கும் வைத்தியம் பார்ப்பேன்

நான் பாத்தா பைத்தியக்காரன்
உன் பாட்டனுக்கும் வைத்தியம் பார்ப்பேன்
பெற்றெடுத்தத் தாயாக மற்றவரை நான் நெனச்சுப்
பிள்ளையென வாழ்பவன்டா
பெற்றெடுத்தத் தாயாக மற்றவரை நான் நெனச்சுப்
பிள்ளையென வாழ்பவன்டா
அந்தப் பெருமைகளைப் காப்பவன்டா

நான் பாத்தா பைத்தியக்காரன்
உன் பாட்டனுக்கும் வைத்தியம் பார்ப்பேன்
நான் பாத்தா பைத்தியக்காரன்

ஊரே சிரிக்குது உன்னைப் பார்த்து
இப்போ ஊளையிட்டு என்ன லாபம்
என்னைப் பார்த்து

ஊரே சிரிக்குது உன்னைப் பார்த்து
இப்போ ஊளையிட்டு என்ன லாபம்
என்னைப் பார்த்து
காலம் நெருங்குது கதை முடிய
இந்தக் காட்டு நரிக்கூட்டத்துக்கு விதி முடிய

ஊரே சிரிக்குது உன்னைப் பார்த்து
இப்போ ஊளையிட்டு என்ன லாபம்
என்னைப் பார்த்து

நான் பாத்தா பைத்தியக்காரன்
உன் பாட்டனுக்கும் வைத்தியம் பார்ப்பேன்
நான் பாத்தா பைத்தியக்காரன்

ஏ பைத்தியம்
என் கிட்ட விளையாடுற வேலை வச்சுக்காதே
நான் நெருப்பு ஜாக்கிரதை (வசனம்)

நான் நெருப்புல நடப்பவன்டா
ஆனா நீதிக்கு பயந்தவன்டா

நான் நெருப்புல நடப்பவன்டா
ஆனா நீதிக்கு பயந்தவன்டா
தருமத்தை அழிக்க வந்தா
என்னைத் தந்தேனும் காப்பவன்டா
உயிரைத் தந்தேனும் காப்பவன்டா

நான் யாருன்னு இப்போது தெரியாது
அதை நானாகச் சொன்னாலும் புரியாது

நான் யாருன்னு இப்போது தெரியாது
அதை நானாகச் சொன்னாலும் புரியாது
ஊருக்குள் நீ செய்யும் அநியாயம்
நான் உள்ளவரை நிச்சயமா நடக்காது
ஊருக்குள் நீ செய்யும் அநியாயம்
நான் உள்ளவரை நிச்சயமா நடக்காது

நான் நெருப்புல நடப்பவன்டா
ஆனா நீதிக்கு பயந்தவன்டா
தருமத்தை அழிக்க வந்தா
என்னைத் தந்தேனும் காப்பவன்டா
உயிரைத் தந்தேனும் காப்பவன்டா


நான் பாத்தா பைத்தியக்காரன்
உன் பாட்டனுக்கும் வைத்தியம் பார்ப்பேன்
நான் பாத்தா பைத்தியக்காரன்

ஜெய் ஆஞ்சநேயா
ஏ பைத்தியம் என்னை நீ கீழே தள்ளிட்டே
நான் ஆண்டவானுடைய கோயிலையே
பாதுக்காக்க பொறந்தவன்
புடி சாபம் (வசனம்)

கோவில் காக்க வந்தவனே
பாவி என்று மாறிவிட்டா
சாமி எங்கு குடியிருக்கும்
செங்கோல் பிடிக்கும் ஒருவன்
கன்னக்கோல் பிடிக்கும் கள்வனென்றால்
நீதியெங்கு குடியிருக்கும்

கோவில் காக்க வந்தவனே
பாவி என்று மாறிவிட்டா
சாமி எங்கு குடியிருக்கும்
செங்கோல் பிடிக்கும் ஒருவன்
கன்னக்கோல் பிடிக்கும் கள்வனென்றால்
நீதியெங்கு குடியிருக்கும்

நான் கேட்டு வச்ச கேள்வியிலே பொருளிருக்கு
அதைக் கேளாதோர் உள்ளத்திலே இருளிருக்கு
அதைக் கேளாதோர் உள்ளத்திலே இருளிருக்கு

நான் பாத்தா பைத்தியக்காரன்
உன் பாட்டனுக்கும் வைத்தியம் பார்ப்பேன்
நான் பாத்தா பைத்தியக்காரன்

ஹேய்
ரொம்ப நேரமா உன்ன நான் பார்க்கிறேன்
சதுர் வாங்கி சதுர் வாங்கி
நீ என்ன அடிக்கிற

அதுக்கு கிக்கின்னு சிரிப்பு தேவை இப
நான் பக்தன்
என்னையும் தொடுறான் உங்களையும் தொடுறான்
நம்மள எல்லாம் இவன் தொடலாமா
இவன் என்ன க்ஜாதி என்ன குளம் என்ன கோத்திரம்

பாதுகாவல் போர்வையிலே
ஜாதி இன பேதம் சொல்லி
ஊர்ப் பகையை வளர்ப்பவன் நீ
ஊரில் உள்ளவரை மோதவிட்டு
குள்ளநரி போலிருந்து
ரத்தமெல்லாம் குடிப்பவன் நீ

இந்த உண்மைகளை
ஊரறிய எடுத்துரைப்பேன்
நாளை உன்னுடைய ஆட்டமெல்லாம்
முடித்து வைப்பேன்
நாளை உன்னுடைய ஆட்டமெல்லாம்
முடித்து வைப்பேன்

நான் பாத்தா பைத்தியக்காரன்
உன் பாட்டனுக்கும் வைத்தியம் பார்ப்பேன்
பெற்றெடுத்தத் தாயாக மற்றவரை நான் நெனச்சுப்
பிள்ளையென வாழ்பவன்டா
பெற்றெடுத்தத் தாயாக மற்றவரை நான் நெனச்சுப்
பிள்ளையென வாழ்பவன்டா
அந்தப் பெருமைகளைப் காப்பவன்டா

நான் பாத்தா பைத்தியக்காரன்
உன் பாட்டனுக்கும் வைத்தியம் பார்ப்பேன்
நான் பாத்தா பைத்தியக்காரன்