Naan Padithaen Kaanjiyilae Naettru

Naan Padithaen Kaanjiyilae Naettru Song Lyrics In English


ஜிஞ்சிக்கா ஜிக்கான் ஜிஞ்சிக்கா ஜிக்கான்
ஜிஞ்சிக்கா ஜிக்கான் ஜிஞ்சிக்கா ஜிக்கான்
ஜிஞ்சிக்கா ஜிக்கான் ஜிஞ்சிக்கா ஜிக்கான்
ஜிஞ்சிக்கா ஜிக்கான் ஜிஞ்சிக்கா ஜிக்கான்
பீப்பி பிப்பி பீப்பி பிப்பிபீபீ
தன்னே லாலல்ல லாலே தாலலாலே லால்லா

தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று
அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று
என்றும் நல்லவர்க்கு காலம் வரும் நாளை
இது அறிஞர் அண்ணா எழுதி வைத்த ஓலை

தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று
அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று

இந்தியாவின் தந்தை என்று காந்தி இருந்தார்
அவர் இடையினிலே ஏழையைபோல் கந்தை அணிந்தார்
இந்தியாவின் தந்தை என்று காந்தி இருந்தார்
அவர் இடையினிலே ஏழையைபோல் கந்தை அணிந்தார்
ஏணியாக தாழ்ந்தவர்க்கு உதவி புரிந்தார்
இன்று ஏசுவோர்கள் அவரால்தான் பதவி அடைந்தார்
இன்று ஏசுவோர்கள் அவரால்தான் பதவி அடைந்தார்

தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று
அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று

நாட்டுக்காக உழைப்பதற்கே அண்ணா பிறந்தார்
பொது நலத்தில்தானே நாள் முழுக்க கண்ணா இருந்தார்
நாட்டுக்காக உழைப்பதற்கே அண்ணா பிறந்தார்
பொது நலத்தில்தானே நாள் முழுக்க கண்ணா இருந்தார்
ஏற்றுக் கொண்ட பதவிக்கெல்லாம் பெருமையைத் தந்தார்
தன் இனிய குடும்பம் ஒன்றுக்குத்தான் வறுமையை தந்தார்
தன் இனிய குடும்பம் ஒன்றுக்குத்தான் வறுமையை தந்தார்

தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று
அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று
என்றும் நல்லவர்க்கு காலம் வரும் நாளை
இது அறிஞர் அண்ணா எழுதி வைத்த ஓலை

தெரு தெருவாய் கூட்டுவது பொது நல தொண்டு
ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுயநலம் உண்டு
தெரு தெருவாய் கூட்டுவது பொது நல தொண்டு
ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுயநலம் உண்டு
மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார்
தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்
தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்

தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று
அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று

வீட்டுக்கெல்லாம் வெளிச்சம் போட கொடுத்த பணத்திலே
தாங்கள் வெளிச்சம் போட்டு வாழ்ந்து விட்டார் நகர சபையிலே
வீட்டுக்கெல்லாம் வெளிச்சம் போட கொடுத்த பணத்திலே
தாங்கள் வெளிச்சம் போட்டு வாழ்ந்து விட்டார் நகர சபையிலே
ஏழைக்கெல்லாம் வீடு என்று திட்டம் தீட்டினார்
தாங்கள் வாழ்வதற்கு ஊர் பணத்தில் வீடு கட்டினார்
தாங்கள் வாழ்வதற்கு ஊர் பணத்தில் வீடு கட்டினார்


தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று
அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று

ஏய்பவர்க்கே காலம் என்று எண்ணி விடாதே
பொய் எத்தனை நாள் கை கொடுக்கும் மறந்து விடாதே
ஏய்பவர்க்கே காலம் என்று எண்ணி விடாதே
பொய் எத்தனை நாள் கை கொடுக்கும் மறந்து விடாதே
ஒரு நாள் இந்த நிலைமைகெல்லாம் மாறுதல் உண்டு
அந்த மாறுதலை செய்வதற்கு தேர்தல் உண்டு
அந்த மாறுதலை செய்வதற்கு தேர்தல் உண்டு

ஒரு சம்பவம் என்பது நேற்று

நேற்று

அது சரித்திரம் என்பது இன்று

இன்று

அது சாதனை ஆவது நாளை

நாளை

வரும் சோதனைதான் இடை வேளை