Naan Padithaen Kaanjiyilae Naettru |
|---|
ஜிஞ்சிக்கா ஜிக்கான் ஜிஞ்சிக்கா ஜிக்கான்
ஜிஞ்சிக்கா ஜிக்கான் ஜிஞ்சிக்கா ஜிக்கான்
ஜிஞ்சிக்கா ஜிக்கான் ஜிஞ்சிக்கா ஜிக்கான்
ஜிஞ்சிக்கா ஜிக்கான் ஜிஞ்சிக்கா ஜிக்கான்
பீப்பி பிப்பி பீப்பி பிப்பிபீபீ
தன்னே லாலல்ல லாலே தாலலாலே லால்லா
தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று
அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று
என்றும் நல்லவர்க்கு காலம் வரும் நாளை
இது அறிஞர் அண்ணா எழுதி வைத்த ஓலை
தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று
அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று
இந்தியாவின் தந்தை என்று காந்தி இருந்தார்
அவர் இடையினிலே ஏழையைபோல் கந்தை அணிந்தார்
இந்தியாவின் தந்தை என்று காந்தி இருந்தார்
அவர் இடையினிலே ஏழையைபோல் கந்தை அணிந்தார்
ஏணியாக தாழ்ந்தவர்க்கு உதவி புரிந்தார்
இன்று ஏசுவோர்கள் அவரால்தான் பதவி அடைந்தார்
இன்று ஏசுவோர்கள் அவரால்தான் பதவி அடைந்தார்
தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று
அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று
நாட்டுக்காக உழைப்பதற்கே அண்ணா பிறந்தார்
பொது நலத்தில்தானே நாள் முழுக்க கண்ணா இருந்தார்
நாட்டுக்காக உழைப்பதற்கே அண்ணா பிறந்தார்
பொது நலத்தில்தானே நாள் முழுக்க கண்ணா இருந்தார்
ஏற்றுக் கொண்ட பதவிக்கெல்லாம் பெருமையைத் தந்தார்
தன் இனிய குடும்பம் ஒன்றுக்குத்தான் வறுமையை தந்தார்
தன் இனிய குடும்பம் ஒன்றுக்குத்தான் வறுமையை தந்தார்
தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று
அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று
என்றும் நல்லவர்க்கு காலம் வரும் நாளை
இது அறிஞர் அண்ணா எழுதி வைத்த ஓலை
தெரு தெருவாய் கூட்டுவது பொது நல தொண்டு
ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுயநலம் உண்டு
தெரு தெருவாய் கூட்டுவது பொது நல தொண்டு
ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுயநலம் உண்டு
மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார்
தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்
தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்
தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று
அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று
வீட்டுக்கெல்லாம் வெளிச்சம் போட கொடுத்த பணத்திலே
தாங்கள் வெளிச்சம் போட்டு வாழ்ந்து விட்டார் நகர சபையிலே
வீட்டுக்கெல்லாம் வெளிச்சம் போட கொடுத்த பணத்திலே
தாங்கள் வெளிச்சம் போட்டு வாழ்ந்து விட்டார் நகர சபையிலே
ஏழைக்கெல்லாம் வீடு என்று திட்டம் தீட்டினார்
தாங்கள் வாழ்வதற்கு ஊர் பணத்தில் வீடு கட்டினார்
தாங்கள் வாழ்வதற்கு ஊர் பணத்தில் வீடு கட்டினார்
தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று
அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று
ஏய்பவர்க்கே காலம் என்று எண்ணி விடாதே
பொய் எத்தனை நாள் கை கொடுக்கும் மறந்து விடாதே
ஏய்பவர்க்கே காலம் என்று எண்ணி விடாதே
பொய் எத்தனை நாள் கை கொடுக்கும் மறந்து விடாதே
ஒரு நாள் இந்த நிலைமைகெல்லாம் மாறுதல் உண்டு
அந்த மாறுதலை செய்வதற்கு தேர்தல் உண்டு
அந்த மாறுதலை செய்வதற்கு தேர்தல் உண்டு
ஒரு சம்பவம் என்பது நேற்று
நேற்று
அது சரித்திரம் என்பது இன்று
இன்று
அது சாதனை ஆவது நாளை
நாளை
வரும் சோதனைதான் இடை வேளை
