Naan Sinam Ariven

Naan Sinam Ariven Song Lyrics In English


நான் சினம் அறிவேன் சிறை அறிவேன்
தனிமையின் சாபம் நன்கு அறிவேன்
அகம் அறிவேன் தகம் அறிவேன்
பழி அதன் பாரம் என் வழி

சூது
சதித்தும் சாகாதவன்
ஆசை
அழைத்தும் ஆடாதவன்
வன்மம்
விரட்டி வீழாதவன்
அன்பை
அடைய வாழ்கின்றவன்

நேசம் நெஞ்சில் வாழும் வரை
கால்கள் ஓடுமே
குற்றம் மீறி மாறும் வரை
தேடல் தொடருமே

வேஷம் வாடி வீழும் வரை
பாசம் பொறிவலை
அன்பை நானே ஏற்கும் வரை
இல்லை விடுதலை

நான் மனம் அறிவேன் குணம் அறிவேன்
அகந்தையின் ஆழம் நன்கு அறிவேன்
பலம் அறிவேன் களம் அறிவேன்
வெறி அதை ஆளும் என் விழி

சாக்கு
இருந்தும் சொல்லாதவன்
வாக்கு
கொடுத்து காய்கின்றவன்
தாக்கும்
எதையும் ஏற்கின்றவன்
அன்பை பொழிய வாழ்கின்றவன்


நேசம் நெஞ்சில் வாழும் வரை
கால்கள் ஓடுமே
குற்றம் மீறி மாறும் வரை
தேடல் தொடருமே

வேஷம் வாடி வீழும் வரை
பாசம் பொறிவலை
அன்பை நானே ஏற்கும் வரை
இல்லை விடுதலை

நேசம் நெஞ்சில் வாழும் வரை
கால்கள் ஓடுமே
குற்றம் மீறி மாறும் வரை
தேடல் தொடருமே

வேஷம் வாடி வீழும் வரை
பாசம் பொறிவலை
அன்பை நானே ஏற்கும் வரை
இல்லை விடுதலை