Naan Sinam Ariven |
---|
நான் சினம் அறிவேன் சிறை அறிவேன்
தனிமையின் சாபம் நன்கு அறிவேன்
அகம் அறிவேன் தகம் அறிவேன்
பழி அதன் பாரம் என் வழி
சூது
சதித்தும் சாகாதவன்
ஆசை
அழைத்தும் ஆடாதவன்
வன்மம்
விரட்டி வீழாதவன்
அன்பை
அடைய வாழ்கின்றவன்
நேசம் நெஞ்சில் வாழும் வரை
கால்கள் ஓடுமே
குற்றம் மீறி மாறும் வரை
தேடல் தொடருமே
வேஷம் வாடி வீழும் வரை
பாசம் பொறிவலை
அன்பை நானே ஏற்கும் வரை
இல்லை விடுதலை
நான் மனம் அறிவேன் குணம் அறிவேன்
அகந்தையின் ஆழம் நன்கு அறிவேன்
பலம் அறிவேன் களம் அறிவேன்
வெறி அதை ஆளும் என் விழி
சாக்கு
இருந்தும் சொல்லாதவன்
வாக்கு
கொடுத்து காய்கின்றவன்
தாக்கும்
எதையும் ஏற்கின்றவன்
அன்பை பொழிய வாழ்கின்றவன்
நேசம் நெஞ்சில் வாழும் வரை
கால்கள் ஓடுமே
குற்றம் மீறி மாறும் வரை
தேடல் தொடருமே
வேஷம் வாடி வீழும் வரை
பாசம் பொறிவலை
அன்பை நானே ஏற்கும் வரை
இல்லை விடுதலை
நேசம் நெஞ்சில் வாழும் வரை
கால்கள் ஓடுமே
குற்றம் மீறி மாறும் வரை
தேடல் தொடருமே
வேஷம் வாடி வீழும் வரை
பாசம் பொறிவலை
அன்பை நானே ஏற்கும் வரை
இல்லை விடுதலை