Naan Ungalai Ketkindren |
---|
நான் உங்களை கேட்கின்றேன்
நான் உங்களை கேட்கின்றேன்
நான் உங்களை கேட்கின்றேன்
ஏழை உரிமையைக் காக்க
வறுமையை நீக்க
உரிமையைக் காக்க வறுமையை நீக்க
உள்ளவர் சொல்லும் பதிலென்ன
நான் உங்களை கேட்கின்றேன்
பொய்யை நம்பிப் பிழைப்பவன் வீட்டில்
நெய்யும் பாலும் மணப்பதா
கையை நம்பி உழைப்பவன் வீட்டில்
கஞ்சி கலயம் உருளுவதா
அழுவதை மாற்றி சிரிப்பதைக் காட்ட
அழுவதை மாற்றி சிரிப்பதைக் காட்ட
அறிந்தவர் சொல்லும் பதிலென்ன
நான் உங்களை கேட்கின்றேன்
சிலந்தி வலையைப் பின்னி வைத்து
சிறுசிறு பூச்சியை பிடிக்குதய்யா
பலரை சில பேர் பணிய வைக்க
பணம்தான் வலையாய் உதவுதய்யா
பட்டினி தீர்க்கும்
திட்டங்கள் தீட்ட
பட்டினி தீர்க்கும் திட்டங்கள் தீட்ட
படித்தவர் சொல்லும் பதிலென்ன
நான் உங்களை கேட்கின்றேன்
எத்தனை காலம் இந்தக் கேள்வி
ஏழைக்கு ஏனோ இந்த நீதி
புத்தனும் ஏசுவும் உத்தமன் காந்தியும்
பூமியிலே பிறந்தது வீண்தானா
புரட்சியில் தோன்றும்
புதுமையைக் காண
புரட்சியில் தோன்றும் புதுமையைக் காண
புரிந்தவர் சொல்லும் பதிலென்ன
நான் உங்களை கேட்கின்றேன்
ஏழை உரிமையைக் காக்க
வறுமையை நீக்க
உள்ளவர் சொல்லும் பதிலென்ன
நான் உங்களை கேட்கின்றேன்