Naan Unnai Azhaikkavillai |
---|
நான் உன்னை அழைக்கவில்லை
என் உயிரை அழைக்கிறேன்
நான் உன்னை அழைக்கவில்லை
என் உயிரை அழைக்கிறேன்
கண்ணை மறைத்துக் கொண்டால்
மனதில் எண்ணம் மறைவதில்லை
நான் சின்னக் குழந்தையம்மா
சொல்லத் தெரியவில்லை
பிள்ளை மழலையிலே உனக்கும்
உள்ளம் புரியவில்லை
நான் உன்னை அழைக்கவில்லை
என் உயிரை அழைக்கிறேன்
கண்ணை மறைத்துக் கொண்டால் மனதில்
எண்ணம் மறைவதில்லை
என்ன தவறு செய்தேன்
அதுதான் எனக்கும் புரியவில்லை
என்ன தவறு செய்தேன்
அது தான் எனக்கும் புரியவில்லை
வந்து பிறந்து விட்டேன் ஆனால்
வாழத் தெரியவில்லை
அருகில் இருந்து சொல்லிக் கொடுத்தால்
உலகம் தெரியாதா அம்மா
விவரம் புரியாதா
நான் உன்னை அழைக்கவில்லை
என் உயிரை அழைக்கிறேன்
கண்ணை மறைத்துக் கொண்டால் மனதில்
எண்ணம் மறைவதில்லை
என்னை படைத்த தெய்வம் இன்னும்
கண்ணைத் திறக்கவில்லை
என்னை படைத்த தெய்வம் இன்னும்
கண்ணைத் திறக்கவில்லை
உன்னை அனுப்பி வைத்தான் ஆனால்
உனக்கும் கருணை இல்லை
இருண்ட வீட்டில் அன்பு விளக்கு
இருக்க கூடாதா அம்மம்மா
இரக்கம் பிறக்காதா
நான் உன்னை அழைக்கவில்லை
என் உயிரை அழைக்கிறேன்
கண்ணை மறைத்துக் கொண்டால்
மனதில் எண்ணம் மறைவதில்லை