Naan Vaazhndhadhum

Naan Vaazhndhadhum Song Lyrics In English


நான் வாழ்ந்ததும் உன்னாலே
நிலை தாழ்ந்ததும் உன்னாலே
கண்ணீரினில் ஆடும்
வாழ்வினில் வேதனை சூழ்ந்ததும் உன்னாலே

நான் வாழ்ந்ததும் உன்னாலே
நிலை தாழ்ந்ததும் உன்னாலே
கண்ணீரினில் ஆடும்
வாழ்வினில் வேதனை சூழ்ந்ததும் உன்னாலே

விண்வெளி மீதே வெண்ணிலவை நீ
விளங்கவும் வைத்தாயே
விளங்கவும் வைத்தாயே
விண்வெளி மீதே வெண்ணிலவை நீ
விளங்கவும் வைத்தாயே
விளங்கவும் வைத்தாயே

ஒளி விளங்கிடும் வேளை பனித்திரையாலே
பாதையை மறைத்தாயே
வாழ்வெனும் ஓடம் ஆடிடும் வேளையில்
மூழ்கவும் செய்தாயே

நான் வாழ்ந்ததும் உன்னாலே


கவலையினாலே வாடிய மலரை
கைகளில் எடுத்தாயே
கைகளில் எடுத்தாயேஏ
மலர் புதுமணம் வீசி மகிழ்ந்திடும் வேளை
பூமியில் எறிந்தாயேஏ
சேவையில் நான் வாழ்ந்திருந்தேன் எனை
சோதனை செய்தாயே

என்னுயிர் தெய்வம் எனை மறந்தாலும்
நான் உனை மறவேனே
நான் உனை மறவேனே
இரு கண்களைக் காக்கும் இமைகளைப் போலே
காத்திருப்பேன் மகனே
என் ஆசைகள் யாவும் நீயென நான்
இனி வாழ்வதும் உன்னாலே

நான் வாழ்ந்ததும் உன்னாலே