Naan Vaazhndhadhum |
---|
நான் வாழ்ந்ததும் உன்னாலே
நிலை தாழ்ந்ததும் உன்னாலே
கண்ணீரினில் ஆடும்
வாழ்வினில் வேதனை சூழ்ந்ததும் உன்னாலே
நான் வாழ்ந்ததும் உன்னாலே
நிலை தாழ்ந்ததும் உன்னாலே
கண்ணீரினில் ஆடும்
வாழ்வினில் வேதனை சூழ்ந்ததும் உன்னாலே
விண்வெளி மீதே வெண்ணிலவை நீ
விளங்கவும் வைத்தாயே
விளங்கவும் வைத்தாயே
விண்வெளி மீதே வெண்ணிலவை நீ
விளங்கவும் வைத்தாயே
விளங்கவும் வைத்தாயே
ஒளி விளங்கிடும் வேளை பனித்திரையாலே
பாதையை மறைத்தாயே
வாழ்வெனும் ஓடம் ஆடிடும் வேளையில்
மூழ்கவும் செய்தாயே
நான் வாழ்ந்ததும் உன்னாலே
கவலையினாலே வாடிய மலரை
கைகளில் எடுத்தாயே
கைகளில் எடுத்தாயேஏ
மலர் புதுமணம் வீசி மகிழ்ந்திடும் வேளை
பூமியில் எறிந்தாயேஏ
சேவையில் நான் வாழ்ந்திருந்தேன் எனை
சோதனை செய்தாயே
என்னுயிர் தெய்வம் எனை மறந்தாலும்
நான் உனை மறவேனே
நான் உனை மறவேனே
இரு கண்களைக் காக்கும் இமைகளைப் போலே
காத்திருப்பேன் மகனே
என் ஆசைகள் யாவும் நீயென நான்
இனி வாழ்வதும் உன்னாலே
நான் வாழ்ந்ததும் உன்னாலே