Naan Yaen Pirandhen

Naan Yaen Pirandhen Song Lyrics In English


நான் ஏன் பிறந்தேன்
நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்
என்று நாளும் பொழுதும்
வாழும் வரையில்
நினைத்திடு என் தோழா
நினைத்து செயல்படு என் தோழா
உடனே செயல்படு என் தோழா

நான் ஏன் பிறந்தேன்
நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்
என்று நாளும் பொழுதும்
வாழும் வரையில்
நினைத்திடு என் தோழா
நினைத்து செயல்படு என் தோழா
உடனே செயல்படு என் தோழா

குடிச்சி ஒடம்ப கெடுத்துகிட்டு
வேஆ பொழுத போக்குறீங்களே
இந்த நேரத்துல நாட்டுக்கு
எதாவது நல்லது செய்ய கூடாதா (வசனம் )

ஹ்ம்ம் நாடாமிலா நாடு
இந்த நாடு எங்களுக்கு என்ன செய்துச்சி (வசனம் )

நாடென்ன செய்தது நமக்கு
என கேள்விகள் கேட்பது எதற்கு
நீயென்ன செய்தாய் அதற்கு
என நினைத்தால் நன்மை உனக்கு
நாடென்ன செய்தது நமக்கு
என கேள்விகள் கேட்பது எதற்கு
நீயென்ன செய்தாய் அதற்கு
என நினைத்தால் நன்மை உனக்கு

நான் ஏன் பிறந்தேன்
நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்
என்று நாளும் பொழுதும்
வாழும் வரையில்
நினைத்திடு என் தோழா
நினைத்து செயல்படு என் தோழா
உடனே செயல்படு என் தோழா

மலையில் பிறந்த நதியால்
மக்கள் தாகம் தீர்ந்தது
மரத்தில் பிறந்த கனியால்
அவர் பசியும் தணிந்தது
மலையில் பிறந்த நதியால்
மக்கள் தாகம் தீர்ந்தது
மரத்தில் பிறந்த கனியால்
அவர் பசியும் தணிந்தது


கொடியில் பிறந்த மலரால்
எங்கும் வாசம் தவழ்ந்தது
அன்னை மடியில் பிறந்த உன்னால்
என்ன பயன்தான் விளைந்தது

நான் ஏன் பிறந்தேன்
நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்
என்று நாளும் பொழுதும்
வாழும் வரையில்
நினைத்திடு என் தோழா
நினைத்து செயல்படு என் தோழா
உடனே செயல்படு என் தோழா

பத்துத் திங்கள் சுமந்தாளே
அவள் பெருமைப் படவேண்டும்
உன்னைப் பெற்றதனால் அவள்
மற்றவராலே போற்றப்பட வேண்டும்

கற்றவர் சபையில் உனக்காக
தனி இடமும் தர வேண்டும்
உன் கண்ணில் ஒரு துளி நீர் வந்தாலும்
உலகம் அழ வேண்டும்

நான் ஏன் பிறந்தேன்
நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்
என்று நாளும் பொழுதும்
வாழும் வரையில்
நினைத்திடு என் தோழா
நினைத்து செயல்படு என் தோழா
உடனே செயல்படு என் தோழா