Naanatchi Seithuvarum |
---|
நானாட்சி
செய்து வரும் நான்மாட
கூடலிலே மீனாக்ஷி
என்ற பெயர் எனக்கு
கங்கை நீராட்சி
செய்து வரும் வடகாசி
தன்னில் விசாலாக்ஷி
என்ற பெயர் வழக்கு
கோனாட்சி
பல்லவர்தம் குளிர்சோலை
காஞ்சி தன்னில் காமாக்ஷி
என்ற பெயர் எனக்கு
கொடும்
கோலாட்சி தன்னை
எதிர்க்கும் மாரியம்மன்
என்ற பெயர் கொண்டபடி
காட்சி தந்தேன் உனக்கு
ஆறென்றும்
நதியென்றும் ஓடை
என்றாலும் அது நீரோடும்
பாதை தன்னை குறிக்கும்
நிற்கும் ஊர்
மாறி பேர் மாறி கரு
மாறி உரு மாறி ஒன்றே
ஓம் சக்தியென உரைக்கும்